தான் படித்த அரசுப் பள்ளியை தத்தெடுத்த டாக்டர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 28, 2019

தான் படித்த அரசுப் பள்ளியை தத்தெடுத்த டாக்டர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பேராவூரணி அருகே தெற்குக்காட்டில் உள்ள அரசுப் பள்ளியைத் தத்தெடுத்துள்ளார் டாக்டர் ஒருவர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெரிய தெற்குக்காட்டில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றவர் டாக்டர் து.நீலகண்டன். பிரபல எலும்பு முறிவு மருத்துவரான இவர், தான் படித்த பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ முடிவு செய்தார். இவரது மனைவி புவனேஸ்வரி, தன் கணவரின் கனவை நனவாக்க ஒத்துழைப்பு தந்தார். புவனேஸ்வரியின் மேற்பார்வையில் முதல் கட்டமாக ரூ.2 லட்சத்தில் பள்ளி வகுப்பறையை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிவடைந்து சீரமைக்கப்பட்ட வகுப்பறை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளியைத் தத்தெடுத்து, சீரமைக்கப்பட்ட வகுப்பறையை திறந்துவைத்த டாக்டர் நீலகண்டன், ரூ.2 லட்சம் செலவில் மாணவர்களுக்காக ஸ்மார்ட் கிளாஸ், மேஜைகள், நாற்காலிகள், வகுப்பறைக்கு டைல்ஸ், நூலகத்தில் புத்தகங்களை வைக்க அலமாரி, கணினி ஆகியவற்றை வழங்கினார். வரும் ஆண்டுகளில் இதர வகுப்பறைகளை சீரமைத்துத் தருவதாக அவர் தெரிவித்தார். திறப்பு விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் கோ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரெ.பரமசிவம் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் வீரம்மாள் வரவேற்றார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகேசன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம், பள்ளி ஆசிரியைகள் காந்திமதி, ஜெயந்தி, குளோரி, துர்காதேவி மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிறைவாக ஆசிரியர் செ.ராமநாதன் நன்றி கூறினார்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews