கல்லூரி பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு புகார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 22, 2019

கல்லூரி பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு புகார்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மதுரை வக்ப் போர்டு கல்லூரி பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக, அதிமுக எம்பி அன்வர்ராஜாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த அன்வர்ராஜா ராமநாதபுரம் எம்பியாகவும், வக்ப் போர்டு தலைவராகவும் உள்ளார். மதுரை வக்ப் போர்டு கல்லூரி பணியாளர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து மதுரை சிபிஐ அதிகாரி கார்த்திகைசாமி, இன்ஸ்பெக்டர் வேலாயுதம், மதுசூதனன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர், நேற்று காலை 10 மணிக்கு, ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் உள்ள அன்வர்ராஜா வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரிடம் சுமார் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர். விசாரணையில், இவ்வழக்கு தொடர்பாக மேலும் சில ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாக கூறப்படுகிறது. ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சிபிஐ நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சி எம்பி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் மக்களவை தேர்தலில் சிட்டிங் எம்பி அன்வர்ராஜாவுக்கு சீட் வழங்கப்படாமல், அதிமுக கூட்டணி கட்சியான பாஜ, ராமநாதபுரத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews