அபிநந்தன் பெரியரில் பல்கலைக்கழகத்தில் புதிய இட ஒதுக்கீடு திட்டம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 12, 2019

அபிநந்தன் பெரியரில் பல்கலைக்கழகத்தில் புதிய இட ஒதுக்கீடு திட்டம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அபிநத்தன் பெயரில் ஹரியானாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் புதிய இட ஒதுக்கீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ விஸ்வகர்மா திறன் பல்கலைக்கழகம் இத்திட்டத்தை அறிவித்துள்ளது. இந்திய விமானப் படை வீரர் அபிநத்தன் பெயரில் பல்கலைக்கழகத்தில் சிறப்பு இட ஒதுக்கீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் காஷ்மீரில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப் படை நடத்திய வான்வழித் தாக்குதலின்போது தமிழகத்தைச் சேர்ந்த கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் பிடித்துச்சென்றது. இரண்டு நாட்களுக்குப் பின் அபிநந்நன் இந்தியா திரும்பினார். இந்நிலையில், அவரது பெயரில் ஹரியானாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் புதிய இட ஒதுக்கீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ விஸ்வகர்மா திறன் பல்கலைக்கழகம் இத்திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் ஒரு சதவீதம் இடங்கள் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஒதுக்கப்படுகிறது.
வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் இந்த இட ஒதுக்கீட்டில் அதிக மாணவர்கள் விண்ணப்பித்தால் தனியாக தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜ் நேரு, "ராணுவ வீரர்களுக்கு அரசு அறிவித்துள்ள உதவிகளுடன் கூடுதலாக இத்திட்டத்தை அறிவித்துள்ள முதல் பல்கலைக்கழகம் இது" எனக் தெரிவித்துள்ளார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews