பிளஸ்1 உயிரியல் தேர்வு கடினம் : நீட் மாடல் கேள்விகளால் மாணவர்கள் அதிர்ச்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 19, 2019

பிளஸ்1 உயிரியல் தேர்வு கடினம் : நீட் மாடல் கேள்விகளால் மாணவர்கள் அதிர்ச்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பிளஸ்1 உயிரியல் தேர்வில் நீட் மாடலில் கேள்விகள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தமிழகத்தில் பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று உயிரியல் பாடத்திற்கான தேர்வு நடந்தது. நடப்பாண்டு பிளஸ்1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் விலங்கியல் பாடத்துக்கு 2 புத்தகம், தாவரவியல் பாடத்துக்கு 2 புத்தகம் என அதிகமான பாடங்கள் சேர்க்கப்பட்டிருந்தது. 4 பாடங்களையும் சேர்த்து 70 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது. தேர்வில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கொக்கராயன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தாவரவியல் ஆசிரியர் ராஜேந்திரன் கூறுகையில், ‘வழக்கமாக அரசு பொதுத்தேர்வில், தாவரவியல் பாடத்தில் கேள்விகள் எளிமையாக கேட்கப்படும். விலங்கியல் கேள்விகள் சற்று கடினமாக இருக்கும். ஆனால், நடப்பாண்டு 2 பாடங்களிலும் கடினமாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. தாவரவியல் பாடத்தில் படம் வடிவில் அதிகமானகேள்விகள் வந்துள்ளது. விலங்கியலில் நீட் தேர்வு மாடலில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. பாடங்களை நன்றாக புரிந்து படிக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும். அரசு பள்ளி மாணவர்களை பொறுத்தவரை தேர்ச்சி மதிப்பெண் பெறுவதில் எந்த பிரச்னையும் இருக்காது,’ என்றார். பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நேற்று நடந்தன.
தனித்தேர்வர்கள் உட்பட, 1676 பேர் பங்கேற்கவில்லை.திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ்1 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், ஆடை தொழில்நுட்பம் மற்றும் அலுவலக மேலாண்மை தேர்வுகள் முறையே, 10 ஆயிரத்து 256 மாணவர்களுக்கு, நேற்று தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.இதில், உயிரியல் - 5478; தாவரவியல் - 315; வரலாறு - 2419; வணிக கணிதம் - 1522; ஆடை தொழில்நுட்பம் - 31; அலுவலக மேலாண்மை - 109 பேர் மட்டுமே தேர்வெழுதினர்; தனித்தேர்வர்களில், 303 பேர் பங்கேற்கவில்லை.வினாத்தாள் குறித்து மாணவர்கள் கூறியதாவது:விக்ரம், கே.எஸ்.சி., பள்ளி: உயிரியல் தேர்வை பொருத்தவரை, ஒன்று மற்றும் 5 மதிப்பெண் கேள்விகள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. மற்ற கேள்விகள் ஈஸியாக இருந்ததால் சமாளித்துவிட்டேன். இல்லையேல் திணறியிருப் பேன்.எம்.அகபு, கே.எஸ்.சி., பள்ளி: தாவரவியல் தேர்வில் நம்பிக்கையாக வரும் என்று நினை த்து படித்த எந்த கேள்வியும் வரவில்லை.
மொத்தத்தில் பாஸ் ஆகி விடலாம் என்ற அளவிற்கே இருந்தது.எப்.கிறிஸ்டினா ஜெனிபர், ராமகிருஷ்ணா பள்ளி: உயிரியல் தேர்வில், 2 மதிப்பெண் கேள்விகள் கஷ்டமாக இருந்தது. பலமுறை படித்த பிறகே கேள்விகளை புரிந்துகொள்ள முடிந்தது.'டிவி ஸ்ட்' முறையில் கேட்கப்பட்டிருந்தன.எஸ்.பிரியதர்ஷினி, ராமகிருஷ்ணா பள்ளி: உயிரியல் தேர்வு எதிர்பார்த்தபடி கேள்விகள் வரவில்லை. ஓரளவுக்கு ஈஸிதான். இருந்தாலும், 5 மதிப்பெண், 3 மதிப்பெண் கேள்விகள் ஆழமாக கேட்கப்பட்டிருந்ததால் சிரமமாக இருந்தது.10ம் வகுப்புதமிழ் 2ம் தாள்!இதைத்தொடர்ந்து மதியம் 2:15 மணிக்கு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது.இதில், 29 ஆயிரத்து, 322 பேர் தேர்வெழுதினர்; 1037 பேர் ஆப்சென்ட். மேலும், அனுமதிக்கப்பட்ட தனித்தேர்வர்களில், 498 பேர் பங்கேற்றனர்; 46 பேர் தேர்வெழுத வரவில்லை.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews