👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
நாட்டில் வேலை வாய்ப்பின்மை குறைந்துள்ளதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அதனை மறுத்துள்ள ஈ.பி.எப்.ஓ., வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈ.பி.எப்.ஓ., வெளியிட்ட அறிக்கை: கடந்த ஜனவரி மாத நிலவரப்படி 17 மாதங்களில் வேலை வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 96 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 2017 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 609 வேலைவாயப்பு மட்டுமே இருந்தன. 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2019 ஜனவரி வரையில் ஊழியர் சேம நல நிதியம் 76.48 லட்சம் புதிய சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இது புதிய வேலைவாய்பை உருவாக்கி உள்ளதை உணர்த்துகிறது.
2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 22-25 வயதுக்குட்பட்டோருக்கு 2.44 லட்சம் வேலை வாய்ப்புகளும் 18-21 வயதுக்குட்பட்டோருக்கு 2.24 லட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரித்து வந்துள்ளது நிரூபணமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்