டைம்பாஸுக்காக எழுதிய ஆன்லைன் தேர்வு! - மும்பை மாணவனுக்கு கூகுள் கொடுத்த இன்ப அதிர்ச்சி #Shocking - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 30, 2019

டைம்பாஸுக்காக எழுதிய ஆன்லைன் தேர்வு! - மும்பை மாணவனுக்கு கூகுள் கொடுத்த இன்ப அதிர்ச்சி #Shocking

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
ஒவ்வோர் ஆண்டும் பொறியியல் படித்து முடித்துவிட்டு முன்னணி ஐடி நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்று இளைஞர் இளைஞிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மும்பை இளைஞர் ஒருவரோ பெரிதாக முயற்சி ஏதும் எடுக்காமலேயே கூகுள் நிறுவனத்திலேயே வேலை கிடைத்துள்ளது. மும்பையைச் சேர்ந்த அப்துலா கான், ஸ்ரீஎல்ஆர் திவாரி பொறியியல் கல்லூரியில் பி.இ- கம்யூட்டர் சைன்ஸ் படித்து வருகிறார். முதலில் ஐ.ஐ.டி-யில் சேர்வதற்காக நுழைவுத் தேர்வு எழுதி, தோல்வி அடைந்ததால் இந்தப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டார்.
வீட்டில் இருக்கும்போது இணையத்தில் புரோகிராமிங் தொடர்பாக எதையாவது படித்துக்கொண்டிருப்பார். ஒருமுறை கூகுள் நடத்திய ஆன்லைன் புரோகிராமிங் கண்டஸ்டில் பொழுதுபோவதற்காகப் பங்கேற்றார். சில தினங்களில் அவருக்குக் கூகுள் நிறுவனத்திலிருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. அப்துலாவுக்கு இதை நம்பவே முடியவில்லை. நேர்காணல் லண்டனில் இருக்கும் கூகுள் அலுவலகத்தில் நடைபெற்றது. அதிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் லண்டன் அலுவலகத்தில் பணிக்கு சேருமாறு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா. ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய். சில சமயங்களில் நம்மிடம் இருக்கும் திறமை நமக்கே தெரிவது கிடையாது. ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியாத அப்துலா இன்று லண்டனில் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்யப் போகிறார். படித்துக்கொண்டிருக்கும்போதே கூகுளில் வேலைக்குச் சேரும் இரண்டாவது மாணவர் இவர். கடந்த 2018ம் ஆண்டில் ஐ.ஐ.டி-யில் படித்துக் கொண்டிருந்த சினேகா என்னும் மாணவி, 1.2 கோடி ரூபாய் ஆண்டு சம்பளத்தில் கூகுளில் வேலைக்குச் சேர்ந்தார்.
பிரபல வலைதள நிறுவனமான கூகுளில், மும்பையை சேர்ந்த சாதாரண கல்லூரியில் படித்த மாணவர் ஒருவர் வருடத்திற்க ரூ.1.2 கோடி சம்பளத்தில் பணி ஆணை பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பொதுவாக ஐஐடி, எம்ஐடி போன்ற பிரபலமான கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கே இதுபோன்ற உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைக்கும் நிலையில், சாதாரண கல்லூரியில் படித்த மாணவன் ஒருவர் 1.2 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் அப்துல்லா கான். இவர் ஐஐடியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டு, அதற்கான தேர்வுகளை எழுதிய நிலையில், தோல்வி அடைந்ததால், சாதாரண கல்லூரியில் சேர்ந்த படித்து பட்டம் பெற்றார். அதைத்தொடர்ந்து, கூகுள் நிறுவனத்தில் பணிக்காக விண்ணப்பித்திருந்த அப்துல்லா கானுக்கு, இன்டர்வியூ குறித்து தகவல் வந்தது. அதையடுத்து, ஆன்லைன் மூலமே அவரிடம் நேர்காணல் நடைபெற்றது.
இவைகள் அனைத்திலும் அப்துல்லாகான் தேர்ச்சி பெற்ற நிலையில், இறுதிச்சுற்று இன்டர்வியூவுக்காக லண்டனுக்கு அழைக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற நேர்காணலில் வெற்றிபெற்ற அப்துல்லாகானுக்கு கூகுள் நிறுவனம் பணி ஆணை வழங்கியது. அவருக்கு ஆண்டுக்கு 60 ஆயிரம் பவுண்டுகள் (ரூ. 54.5 லட்சம்) போனஸ், 85 ஆயிரம் பவுண்டுகள் (ரூ. 58.9 லட்சம்), ஆக மொத்தம் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளம் வழங்கப்படும் என்றும் பணி ஆணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அப்துல்லா கான், கூகுளில் பணி கிடைக்கும் என்பது குறித்து தான் எதிர்பார்க்கவிர்லலை என்றும், இன்டர்வியூ காரணமாக தனக்கு அனுபவம் கிடைக்கும் என்பதாலேயே பங்கேற்ன்..ஆனால் எனக்கு வேலை கிடைத்துவிட்டது.. நான் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனேன் என்று கூறியுள்ளார்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews