👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
10ம் வகுப்பு தேர்வுகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் சமவெளி பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருவதால் இனிவரும் நாட்களில் நீலகிரி மாவட்டம் வரக் கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளில் தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்படும். கோடை காலம் என்பதால் சமவெளி பகுதிகளில் கடுமையான வெயில் நிலவும். வெம்மையில் இருந்து தப்பித்து கொள்வதற்கும், கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இம்மாதங்களில் வருகை புரிகின்றனர்.
கோடை விடுமுறை சமயத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை பன்மடங்கு அதிகரிக்கும். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிகின்றனர். சமவெளிப் பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து பர்லியார், குன்னூர் வழியாகத்தான் வருகின்றனர். இதனால் ஏப்ரல், ேம மாதங்களில் போக்குவரத்து நெரிசல்கள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
இதனிடையே தற்போது சமவெளிப் பகுதியில் வெயில் வாட்டி வருவதால் சூடு தாங்க முடியாமல் சுற்றுலா பயணிகள் சற்று முன்னதாகவே ஊட்டிக்கு வர துவங்கியுள்ளனர். 12ம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்வுகள் இன்றுடன் முடிவடைய உள்ளது. இதனால் ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இனிவரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கோடை சீசனில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த போதுமான பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்