பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.1-ஆம் தேதி தொடங்குகிறது. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 14, 2019

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.1-ஆம் தேதி தொடங்குகிறது.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 12,546 பள்ளிகளச் சேர்ந்த 9 லட்சத்து 59,618 மாணவ, மாணவிகளும் 38,176 தனித்தேர்வர்களும் எழுதவுள்ளனர். சென்னை மாநகரில் 567 பள்ளிகளில் உள்ள 213 மையங்களில் 50,687 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். அதைப்போல், புதுச்சேரியில் 302 பள்ளிகளில் உள்ள 48 மையங்களில் 16,697 பேர் தேர்வில் கலந்துகொள்கிறார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 3,731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர், கடலூர், சேலம்,கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, சென்னை புழல் ஆகிய மத்திய சிறைகளில் உள்ள 152 சிறைவாசிகள் புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை ஆகிய சிறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மையங்களில் தேர்வெழுதுகிறார்கள். தேர்வுப்பணியில் 49 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தேர்வறையில், ஆசிரியர்களும் செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது. தேர்வறைகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு உடந்தையாக இருக்கும், பள்ளி நிர்வாகத்தினர் மீதான நடவடிக்கையும் கடுமையாக இருக்கும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் (தமிழ், ஆங்கிலம்) பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரையும் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரையும் நடைபெறும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 29-ஆம் தேதி முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் ஏப்.1-ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவ-மாணவியருக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் இயங்கும் 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் படிக்கும் 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 பள்ளி மாணவர்கள், 38 ஆயிரத்து 176 தனித் தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் நாளை பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். . சென்னை மாவட்டத்தில் இயங்கும் 567 பள்ளிகள் மூலம் 50 ஆயிரத்து 678 பேர் எழுதுகின்றனர். அவர்களுக்காக சென்னையில் 213 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியை சேர்ந்த 302 பள்ளிகளில் படிக்கும் 16 ஆயிரத்து 597 மாணவ மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.
அவர்களுக்காக புதுச்சேரியில் 48 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வில் வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை,திருச்சி மற்றும் சென்னை புழல் சிறையை சேர்ந்த 152 கைதிகளும் பங்கேற்கின்றனர். அவர்களுக்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பில் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுத உள்ள 5 லட்சத்து 22 ஆயிரத்து 409 பள்ளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக 49 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 500 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வின் போது ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காலை, மாலை தேர்வுகள் பத்தாம் வகுப்பு தேர்வில் இடம் பெறும் தமிழ் மொழிப்பாடத்தில் ( முதல் தாள் இரண்டாம் தாள்), ஆங்கில மொழிப்பாடத்தில்(முதல் தாள், இரண்டாம் தாள்) ஆகியவற்றுக்கான தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 வரை நடக்கும். மற்ற பாடங்களான கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் மற்றும் விருப்ப மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 வரை நடக்கும். தேர்வின்போது கேள்வித்தாள் படித்துப் பார்க்க, விடைத்தாள் முகப்பு பக்கத்தில் விவரங்கள் எழுதி கையெழுத்திட 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews