ஆசிரியர் சங்கத்தில் சிறப்பாக செயல்பட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 27, 2019

ஆசிரியர் சங்கத்தில் சிறப்பாக செயல்பட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மடுகரை அரசு தொடக்கப் பள்ளி சார்பில், பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் சிறப்பாக செயல்பட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.தலைமையாசிரியர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். ஆசிரியர் கலையரசி வரவேற்றார். நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், பெற்றோர்கள் மாணவர்களை எவ்வாறு பாரமரிக்க வேண்டும், மாணவர்களின் செயல்பாடுகளை எவ்வாறு கண்காணிப்பது குறித்து விளக்கி பேசினார். பின்னர், சிறப்பாக செயல்பட்ட உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கி சால்வை அணிவித்து பாராட்டினார்.மீனாட்சி பேட் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ரவி வாழ்த்துரை வழங்கினார். மடுகரை இந்தியன் வங்கி மேலாளர் நாகஜோதி, நெட்டப்பாக்கம் தொகுதி காங்., பொறுப்பாளர் அம்மைநாதன் கருத்துரை வழங்கினார்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கவுரி, ராஜேஸ்வரி, தனலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் காயத்திரி நன்றி கூறினார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews