அங்கன்வாடி மையத்திற்கு பணியிறக்கம் செய்யும் வழக்கில் ( 26.02.2019) வழக்கு நிலவரம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முழுவிபரம்!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 26, 2019

அங்கன்வாடி மையத்திற்கு பணியிறக்கம் செய்யும் வழக்கில் ( 26.02.2019) வழக்கு நிலவரம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முழுவிபரம்!!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
2009&TET போராட்டக்குழு நண்பர்களுக்கு வணக்கம்
நாம் இரண்டு வாரத்திற்கு முன்பே அங்கன்வாடி வழக்கு தர்மபுரி மாவட்டத்திலிருந்து தனிநபர் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை குறிப்பிட்டு இருந்தோம். இன்று 26.02.2019 அதனை தொடர்ந்து சில இயக்கங்கள் பேரில் தொடுக்கப்பட்ட வழக்கும் விசாரணைக்கு வந்தது அந்த வழக்கில் பத்து நாட்களுக்கு முன்பாக தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கின் ஆணையை இதிலும் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. நண்பர்களே மதுரை உயர்நீதிமன்றத்தில் இதே வழக்கில் இன்னும் தடையாணை உள்ள காரணத்தினால் தற்போதைக்கு எந்தவித அச்சம் கொள்ளத் தேவையில்லை, அரசுத் தரப்பில் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் ஏதேனும் அழுத்தம் தரப்பட்டால் மாநில தலைமை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக உங்களுக்கு உரிய வழி காட்டும்.
மேலும் இன்று தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கில் நகல் வந்த பின்பு அது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம். மேலும் அதில் சில சட்ட நுணுக்கங்கள் உள்ளது, அதை குறித்து வரும் சனிக்கிழமை 02.03.2019 பொதுக்குழுவில் நேரடியாக விரிவாக விவாதித்து கொள்ளலாம் அங்கன்வாடி பணி இறக்கம் செய்யப்பட்ட ஆசிரியை இது குறித்து எந்தவித அச்சம் கொள்ள வேண்டாம்.
மாநில தலைமை நமக்காக தொடர்ந்து நிலையை கவனித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எந்த ஒரு சூழ்நிலையிலும் நமது உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் மேலும் அங்கன்வாடி மையங்களுக்கு நாம் ஏற்றுக் கொண்டு சென்றுவிட்டால் இப்போது இல்லாவிட்டாலும் சில ஆண்டுகளில் நமது ஊதியக் குறைப்பு நடந்து விடும் அதற்கு எந்த ஒரு சூழ்நிலையிலும் நாம் உடன்பட வேண்டாம்... உரிமையை மீட்டெடுக்க அனைத்து வழிகளும் நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம்...
மாநில தலைமை 2009&TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட குழு அங்கன்வாடியில் இடைநிலை ஆசிரியர்கள் பணி அமர்த்துவதை எதிர்த்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வழக்கு தொடுத்து இடைக்கால தடை பெற்று இருந்தது. இந்நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசார ணக்கு பின் ... அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் எந்த பாதிப்பு இருக்கக்கூடாது என்றும். இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எந்த மாற்றம் செய்யக்கூடாது என்றும் அரசுக்கு நீதிபதி வழிக் காட்டல் நெறிமுறையுடன் தீர்ப்பு வழங்கியுள்ளார். இது தீர்ப்பு நமக்கு வெற்றி அல்ல. இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடியில் பணி அமர்த்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்பதே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒருமித்த முடிவு .
ஆகையால் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மேல் முறையீடு செய்து, இறுதி வெற்றி பெறுவோம். வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து மேல் முறையீடு செய்யப்படும். ஆசிரியர்கள் எந்த வித கலக்கமும் அடைய வேண்டாம். இவண் க.மீனாட்சி சுந்தரம் Ex.mlc பொதுச் செயலாளர்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews