பாதிப்புகளின் வகைகள்
# பட்டாசைக் கவனக்குறைவாகக் கையாளுவதால் ஏற்படும் தீக்காயம்.
# அதிகச் சத்தத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்பு
# புகை, ரசாயனக் கலந்த கலவையால் ஏற்படும் பாதிப்பு.
# அதிக ஒளி வெள்ளத்தை ஏற்படுத்தும் பட்டாசுகளால் ஏற்படும் பாதிப்பு.
தீக்காயம்
அதனால், சோப்பு போட்டுக் கழுவ வேண்டாம். சிலர் மை, உப்பு ஆகியவற்றைக் காயத்தின் மீது வைத்துத் தேய்ப்பார்கள். இது காயத்தில் தொற்றை ஏற்படுத்திவிடும். எனவே, கவனமாக இருக்கவும். கழுவிய பிறகு ஈரத் துணியால் காயத்தைச் சுற்றிக் கொண்டால் போதுமானது. இந்த முதலுதவியைச் செய்த பிறகு நேரடியாக மருத்துவ மனைக்குச் சென்றுவிட வேண்டும்.
கண்ணில் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாகக் கண்ணைக் கழுவ வேண்டும். கண்ணைக் கசக்கக் கூடாது. நீங்களாகவே கடையில் கண் சொட்டு மருந்தை வாங்கிப் பயன்படுத்துவதைவிட, மருத்துவரிடம் காட்டிக் காயத்தின் தன்மையைப் பார்த்து மருந்து எடுத்துக்கொள்வதுதான் நல்லது.
புகை அலர்ஜி
மூச்சுத் திணறல், மூச்சிளைப்பு உள்ளவர்கள் அதிகப் புகை வரும் பட்டாசுகளை வெடிக்காமலும், வெடிக்கும் இடத்தில் இருந்து நன்றாகத் தள்ளி நிற்பதும் அவசியம். மாசுக் காற்றை வடிகட்டும் முகமூடியை முகத்தில் அணிந்துகொள்வது, இந்தப் பாதிப்பில் இருந்து தப்பிக்க உதவும்.
வலிப்பு, தலைவலி
அதிக வெளிச்சத்தை உருவாக்கும் பட்டாசுகள் வலிப்பு நோயாளி களுக்கு ஆகாது. குறிப்பாக, இரவு நேரத்தில் அதிக ஒளி வெள்ளத்தைப் பார்க்கும் வலிப்பு நோயாளிகளுக்கு வலிப்பு ஏற்படலாம். எனவே, வலிப்பு நோய் பாதிப்பு உள்ளவர்கள் இந்த வகைப் பட்டாசுகளை வெடிக்காமலும், பார்க்காமலும் இருக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் ஒற்றைத் தலைவலி, டென்ஷன் தலைவலி பாதிப்பு உள்ளவர்களுக்குக் கூடுதல் தலைவலியை உண்டாக்கிவிடும். அதிக ஒலியை உள்வாங்காமல் இருப்பதற்காக ஒலி அடைப்பான் மூலம் காதை அடைத்துக் கொள்வது, தலைவலி வராமல் தடுக்கும்.
கர்ப்பிணிகளுக்கு...
பொதுவான பாதிப்பு
அதிக ஓசை காரணமாகக் காது கேளாமை, தூக்கமின்மை, உயர் ரத்தஅழுத்தப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். காதுகளைப் பாதுகாத்துக் கொள்ள 85 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தவிர்க்க வேண்டும். இதய நோயாளிகள் அதிக ஓசையைக் கேட்பதால் பாதிப்புக்கு ஆளாகலாம்.
(சீ.ஹரிநாராயணன்)
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்