துணைத்தேர்வுகள் ரத்து: தனித்தேர்வர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 17, 2018

துணைத்தேர்வுகள் ரத்து: தனித்தேர்வர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தல்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தனித் தேர்வர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி
பள்ளிக் கல்வித்துறை அண்மையில் வெளியிட்ட அரசாணையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் பொதுத் தேர்வெழுதி தோல்வியுறும் மாணவர்களுக்கு 2019-20-ஆம் கல்வியாண்டு முதல் மார்ச்-ஏப்ரல் பொதுத் தேர்வு, ஜூன்- ஜூலை பருவ சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டும் நடத்தவும், பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு (தனித் தேர்வர்கள்) செப்டம்பர்- அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் துணைத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது
எனவே 2019-ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் பருவத்தில் அந்த மூன்று வகுப்புகளுக்கும் துணைத் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது தற்போதுள்ள நடைமுறையின்படி மார்ச்-ஏப்ரல் பருவத்தில் நடத்தப்படும் பொதுத் தேர்வை பள்ளி மாணவராகவும், தனித்தேர்வராகவும் எழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும் ஜூன், ஜூலை சிறப்பு உடனடித் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டு வருகிறது
அரசாணையின்படி செப்டம்பர்-அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் துணைத் தேர்வு ரத்து செய்யப்படுவதால் வரும் 2019 ஜூன், ஜூலை முதல் மார்ச் பருவத்தில் நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களும், ஜூன், ஜூலை பருவத்தில் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 உடனடி சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வெழுதலாம் என கூறியுள்ளார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews