ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், ஆன்-லைன் மூலம் பள்ளிகளுக்கு மானியம் வழங்கும். திட்டத்துக்கான, வங்கிக்கணக்கு விபரங்களை இம்மாத இறுதிக்குள் பதிவேற்றம் செய்ய, ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும், மானியத்தொகை வழங்கப்படுகிறது
பள்ளியின் கட்டமைப்பு மற்றும்கற்பித்தல் மேம்பாடுகளுக்கு அரசின் சார்பில் மானியத்தொகை வழங்கப்படுகிறது
கடந்தாண்டுக்கு முன்பு வரை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களின் பெயரில், காசோலை வழங்கப்பட்டது. கடந்தாண்டு தலைமையாசிரியர்களின் வங்கி கணக்குகளில் மானியத்தொகை செலுத்தப்பட்டது
இந்த நடைமுறைகளில், மானியத்தொகைக்கான செலவினங்கள் குறித்து, மத்திய மற்றும் மாநில இயக்குனரகம் நேரடியாக கண்காணிக்க முடியாது
நடப்பாண்டில், அரசு வழங்கும் மானியத்தொகையை பள்ளிகள் செலவிடுவது குறித்து நேரடியாக கண்காணித்துக்கொள்ளும் வகையில், 'ஆன்-லைன்', பரிவர்த்தனை நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது
இத்திட்டத்தில் வட்டார வள மையங்களிலிருந்து, ஆன்-லைன் மூலம், அந்தந்த தலைமையாசிரியர்களின் வங்கி கணக்குகளில், மானியத்தொகை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
தலைமையாசிரியர்கள், வங்கி கணக்குகளிலிருந்து அந்த தொகையை எடுக்கும் விபரங்களும், பதிவாகிறது. இதற்கான புதிய 'சாப்ட்வேரில்' தலைமையாசிரியர்களின் வங்கி கணக்கு விபரங்களை ஆசிரியர் பயிற்றுனர்கள் சேகரிக்கின்றனர்
இம்மாத இறுதிக்குள், விபரங்களை 'சாப்ட்வேரில்', பதிவேற்றம்செய்ய, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்