பழைய வினாத்தாளில் இருந்த கேள்விகளை மீண்டும் கேட்டதால், மாணவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாட்டின் 538 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பொறியியல் படிப்பு படித்து வரும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் தேர்வை எழுதினர்.
அதாவது, கடந்த நவம்பர் 2ஆம் தேதி ‘ஆப்டோ எலக்ட்ரானிக் டிவைசஸ்’ எழுதினர். இந்த தேர்வை எழுதிய மாணவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஏனெனில் பார்ட் - பி கேள்விகள் அனைத்தும், கடந்த ஆண்டு வினாத்தாளில் இருந்தவை.
பார்ட் - பி பிரிவில் ஐந்து 13 மார்க் கேள்விகள் இருந்தன. மேலும் பார்ட் - ஏ பிரிவில்(இரு மார்க் கேள்விகள்) 10ல் 5 கேள்விகள் கடந்த ஆண்டு வினாத்தாளில் இருந்தவை. இதுதொடர்பாக தகவலறிந்த அண்ணா பல்கலைக்கழகம், வினாத்தாள் தயாரித்த பேராசிரியரிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் எம்.வெங்கடேசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.
அதன்படி, ‘ஆப்டோ எலக்ட்ரானிக் டிவைசஸ்’ பேப்பர் வரும் நவம்பர் 28ஆம் தேதி(பிற்பகல் 2 முதல் 5 மணி) மீண்டும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விடைத்தாள் மறுமதிப்பீடு மோசடியில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்