உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 18 (November 18 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 18, 2018

உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 18 (November 18 )




நவம்பர் 18 (November 18 ) கிரிகோரியன் ஆண்டின் 322 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 323 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 43 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
326 – பழைய புனித பேதுரு பேராலயம் திறந்து வைக்கப்பட்டது.
401 – விசிகோத்துகள் முதலாம் அலாரிக் மன்னரின் தலைமையில்
ஆல்ப்சு மலைகளைத் தாண்டி வடக்கு இத்தாலியை முற்றுகையிட்டனர்.
1105 – மேகினுல்ஃபோ எதிர்-திருத்தந்தையாக நான்காம் சில்வெசுட்டர் என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1180 – இரண்டாம் பிலிப்பு
பிரான்சின் மன்னராக முடிசூடினார்.

1210 – புனித உரோமைப் பேரரசர் நான்காம் ஒட்டோ திருத்தந்தை மூன்றாம் இன்னொசென்டினால்
நீக்கப்பட்டார் .
1421 – நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்,
1493 – கிறித்தோபர் கொலம்பசு
புவேர்ட்டோ ரிக்கோ என இன்றழைக்கப்படும் நாட்டை முதன்முறையாகக் கண்ணுற்றார்.
1494 – பிரெஞ்சு மன்னர் எட்டாம் சார்ல்சு இத்தாலி]]யின்
புளோரன்சு நகரைக் கைப்பற்றினார்.
1626 – புதிய புனித பேதுரு பேராலயம் ரோம் நகரில் திறந்து வைக்கப்பட்டது.
1730 – பின்னாளைய புருசிய மன்னர் இரண்டாம் பிரெடெரிக் அரச மன்னிப்புப் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
1803 – எயித்தியப் புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது எயித்தியக் குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழிவகுத்தது.
1809 – நெப்போலியப் போர்கள்:
வங்காள விரிகுடாவில் இடம்பெற்ற கடற்படைச் சமரில் பிரெஞ்சுக் கடற்படை பிரித்தானிய கிழக்கிந்தியப் படைகளை வென்றது.
1863 – தென்மார்க்கின் ஒன்பதாம் கிறித்தியான் சிலெசுவிக் நகரம் டென்மார்க்குக்குச் சொந்தம் என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டான். இது 1864 இல்
செருமனி-டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது.

1872 – சூசன் பிரவுன் அந்தோனியும் மேலும் 14 பெண்களும் அமெரிக்க அரசுத்தேர்தலில் வாக்களித்தமைக்காகக் கைது செய்யப்பட்டனர்.
1883 – கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே
நேரவலயங்களை வகுத்துக் கொண்டன.
1903 – பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
1905 – டென்மார்க் இளவரசர் கார்ல்
நோர்வே மன்னராக ஏழாம் ஆக்கொன் என்ற பெயரில் முடிசூடினார்.
1909 – நிக்கராகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள் அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டு போர்க் கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.
1918 – லாத்வியா உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1926 – ஜார்ஜ் பெர்னாட் ஷா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார்.
1928 – வால்ட் டிஸ்னியால் இயக்கப்பட்ட முதலாவது ஒலி இசைவாக்கப்பட்ட
அசையும் கேலித் திரைப்படம்
நீராவிப்படகு வில்லி வெளியிடப்பட்டது. இந்நாளே
மிக்கி மவுசின்யின் பிறந்தநாளாகக் கொண்டாடப்பட்டுகிறது.

1929 – அத்திலாந்திக் பெருங்கடலில்
நியூபவுண்ட்லாந்துக் கரையில் இடம்பெற்ற 7.2 ரிக்டர் அளவு
நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக பலத்த சேதம் எற்பட்டது. 28 பேர் உயிரிழந்தனர்.
1940 – இரண்டாம் உலகப் போர் :
முசோலினியின் கிரேக்க-இத்தாலியப் போரில் ஏற்பட்ட தோல்வியைப் பற்றி விவாதிக்க
இட்லரும் இத்தாலிய வெளியுறவு அமைச்சரும் சந்தித்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்:
பிரித்தானியாவின் 440 போர் விமானங்கள் பெர்லின் மீது குண்டுகளை வீசியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். இச்சமரில் பிரித்தானியா 9 வானூர்திகளையும் 53 விமானிகளையும் இழந்தது.
1947 – நியூசிலாந்தில்
கிறைஸ்ட்சேர்ச் என்ற இடத்தில் வர்த்தகத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 41 பேர் உயிரிழந்தனர்.
1949 – நைஜீரியாவில் சுரங்கத் தொழிலாளர்களின்
வேலைநிறுத்தத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 51 பேர் காயமடைந்தனர்.
1961 – அமெரிக்கத் தலைவர் ஜான் எஃப். கென்னடி 18,000 இராணுவ ஆலோசகர்களை தென் வியட்நாமுக்கு அனுப்பினார். [1][2]
1963 – முதலாவது தள்ளு-குமிழ்
தொலைபேசி சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
1971 – ஓமான் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1978 – கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் மக்கள் கோயிலில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.

1987 – லண்டனில் கிங் க்ரொஸ்
பாதாளத் தொடருந்து நிலையத்தில் தீ பரவியதில் 31 பேர் உயிரிழந்தனர்.
1988 – அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு
மரணதண்டனை வழங்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் ஒப்புதல் அளித்தார்.
1989 – கோபெ செயற்கைமதி விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1991 – தமிழீழ காவல்துறையின் முதலாவது அணி பயிற்சி முடிந்து வெளியேறியது.
1993 – தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின சிறுபான்மை ஆட்சிக்கு முடிவு ஏற்பட வழிவகுத்த புதிய அரசியலைப்புக்கு 21 அரசியல் கட்சிகள் இணைந்து ஒப்புதல் அளித்தன.
1996 – பிரான்சில் இருந்து
இங்கிலாந்துக்கு கால்வாய் சுரங்கம் வழியாகச் சென்ற தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் பலர் காயமடைந்தனர்.
2006 – ஈழப்போர்: மன்னார்க் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில்
இலங்கைக் கடற்படையினர் 10 பேர் கொல்லப்பட்டு 3 விடுதலைப் புலிகள் காயமடைந்தனர்.
2013 – அமெரிக்காவின் நாசா நிறுவனம் மாவென் விண்கலத்தை
செவ்வாய் நோக்கி ஏவியது.

பிறப்புகள்
1787 – லூயி தாகர் , பிரான்சிய இயற்பியலாளர், படப்பிடிப்பாளர் (இ.
1851 )

1836 – டபிள்யூ. எஸ். கில்பர்ட் , ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1911 )
1882 – ஜாக் மாரித்தேன் , பிரான்சிய மெய்யியலாளர் (இ. 1973 )
1888 – திருமலை கிருஷ்ணமாச்சாரி , இந்திய யோகா ஆசிரியர் (இ. 1989)
1888 – பிரான்சஸ் மரியன் , அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர் (இ. 1973 )
1901 – வி. சாந்தாராம் , இந்திய நடிகர், இயக்குநர் (இ. 1990 )
1910 – பதுகேஷ்வர் தத் , இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1965 )
1923 – அலன் ஷெப்பர்ட் , அமெரிக்க விண்வெளி வீரர் (இ. 1998 )
1929 – பி. எஸ். சரோஜா, தமிழகத் திரைப்பட நடிகை
1939 – மார்கரெட் அட்வுட், கனடிய எழுத்தாளர், கவிஞர்
1939 – ஜான் ஓ'கீஃப் , நோபல் பரிசு பெற்ற அமெரிக்க-பிரித்தானிய நரம்பணுவியல் அறிஞர்

1945 – மகிந்த ராசபக்ச , இலங்கையின் 6வது அரசுத்தலைவர்
1956 – ஜிம் விரிச் , அமெரிக்கக் கணினியாளர் (இ. 2014 )
1965 – பிரேம்குமார் குணரத்தினம் , இலங்கை இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர்
1967 – ஷோபாசக்தி, இலங்கை-பிரான்சிய தமிழ்ப் படைப்பாளி, நடிகர், போராளி
1968 – ஓவன் வில்சன் , அமெரிக்க நடிகர்
1982 – நேகா பாசின், இந்தியப் பாடகி, பாடலாசிரியர்
1984 – நயன்தாரா , தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1992 – நேத்தன் கிரெஸ் , அமெரிக்க நடிகர், இயக்குநர்

இறப்புகள்
1772 – மாதவராவ் , மராட்டியப் பேரரசின் நான்காம் தலைமை அமைச்சர் (பி. 1745)
1887 – குஸ்டாவ் பெச்னர், செருமானியக் கவிஞர், மெய்யியலாளர் (பி. 1801 )
1908 – வி. பாஷ்யம் ஐய்யங்கார் , இந்திய வழக்கறிஞர், நீதியாளர் (பி.
1844 )

1922 – மார்செல் புரூஸ்ட், பிரான்சிய எழுத்தாளர் (பி. 1871)
1936 – வ. உ. சிதம்பரம்பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1872)
1952 – போல் எல்யூவார், பிரான்சியக் கவிஞர் (பி. 1895 )
1962 – நீல்சு போர் , நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு இயற்பியலாளர் (பி. 1885 )
1982 – தி. ஜானகிராமன் , தமிழக எழுத்தாளர் (பி. 1921)
2013 – செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன், தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1929 )
2014 – சி. ருத்ரைய்யா , இந்திய இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1947 )
2015 – கா. மீனாட்சிசுந்தரம் , தமிழறிஞர் (பி. 1925 )
2017 – திருமலை பத்மநாதன், ஈழத்து இசையமைப்பாளர்

சிறப்பு நாள்
விடுதலை நாள் (லாத்வியா , உருசியாவிடம் இருந்து 1918)
விடுதலை நாள் (மொரோக்கோ , பிரான்சு, மற்றும் எசுப்பானியாவிடம் இருந்து 1956)


பிபிசி: இந்த நாளில் Click Here
நியூ யோர்க் டைம்ஸ் : இந்த நாளில் Click Here
கனடா : இந்த நாளில் Click Here

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews