TNPSC:தகாயா அகாடமியில் குரூப்-2 இலவச பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 17, 2018

TNPSC:தகாயா அகாடமியில் குரூப்-2 இலவச பயிற்சி

நாளை முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் தகாயா அகாடமி குரூப்-2 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வரும் 18 முதல் 21-ம் தேதி வரை 4 நாட்களுக்கு இலவச பயிற்சியை வழங்க உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தகாயா அகாடமி வளசரவாக்கம், நெய்வேலி ஆர்ச், தாம்பரம் ஆகிய பகுதிகளில் கிளைகளை அமைத்து, தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள், ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இந்நிறுவனம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளை ஒட்டி, குரூப்-2 தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ- மாணவிகளுக்கு நாளை (அக்.18) முதல் 21-ம் தேதி வரை 4 நாட்களுக்கு இலவச பயிற்சியை வழங்கவுள்ளது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி பல சுலபமான முறைகள் கற்றுத்தரப் படும். இதில் பங்கேற்க 8838155699, 8610790841 ஆகிய தொலைபேசி எண்களில் அழைத்து முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும் வேலைக்கு செல்பவர்களுக்காக அதிகாலை 5 மணிக்கு சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அதிகாலையில் வீட்டில் படிக்க இயலாத மாணவர்களுக்காக ‘காலை எழுந்தவுடன் படிப்பு' என்ற திட்டம் தொடங்கப்படவுள்ளது. ஊனமுற்றோர், ஆதர வற்ற விதவையர், கணவனால் கைவிடப்பட் டோர், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews