உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 8 ( October 8 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 08, 2018

உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 8 ( October 8 )





அக்டோபர் 8 ( October 8 ) கிரிகோரியன் ஆண்டின் 281 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 282 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 84 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
314 – உரோமைப் பேரரசர் லிசீனியசு சிபாலே என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் முதலாம் கான்ஸ்டன்டைனிடம் தோற்றான். இத்தோல்வி மூலம் தனது ஐரோப்பியப் பகுதிகளை இழந்தான்.
1573 – எண்பதாண்டுப் போரில்
நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் பெற்றது.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து
இத்தாலி, போலந்து ,
போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1813 – பவேரியாவுக்கும்
ஆசுதிரியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1821 – பெருவில் ஒசே சான் மார்ட்டின் தலைமையிலான அரசு கடற்படை அமைக்கப்பட்டது.
1856 – சீனாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையே
இரண்டாம் அபினிப் போர் ஆரம்பமானது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர் :
அமெரிக்கப் படைகள்
கென்டக்கியில் கூட்டமைப்புப் படைகளின் முற்றுகையைத் தடுத்து நிறுத்தின.
1871 – சிகாகோ பெருந்தீ:
சிக்காகோவில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர். விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் 2,500 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1879 – பசிபிக் போர்: சிலியின் கடற்படை அங்காமொசு என்ற இடத்தில் இடம்பெற்ற போரில்
பெருக் கடற்படையைத் தோற்கடித்தது.
1895 – கொரியாவின் கடைசிப் பேரரசி மெயோங்சியோங் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் சப்பானியப் படைகளால் கியாங்பொக் அரண்மனையில் வைத்து எரிக்கப்பட்டது.
1912 – முதலாவது பால்கன் போர் ஆரம்பமானது:
மொண்டெனேகுரோ
உதுமானியப் பேரரசுடன் போர் தொடுத்தது.
1918 – இரண்டாம் உலகப் போர்:
பிரான்சில் அமெரிக்கக் கோப்ரல் அல்வின் யோர்க் தனியாளாக 25
செருமனிய இராணுவத்தினரைக் கொன்று, 132 பேரைக் கைப்பற்றினார்.
1932 – இந்திய வான்படை நிறுவப்பட்டது.
1939 – இரண்டாம் உலகப் போர்:
செருமனி மேற்கு போலந்தை இணைத்துக் கொண்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்:
ரசுத்தோவ் சண்டயின் ஆரம்பத்தில் செருமனியப் படைகள் அசோவ் கடலை அடைந்து மரியுபோல் நகரைக் கைப்பற்றின.
1944 – இரண்டாம் உலகப் போர்:
குரூசிஃபிக்ஸ் ஹில் சண்டை
ஆஃகன் நகருக்க்கருகில் இடம்பெற்றது.
1952 – லண்டனில் தொடருந்து விபத்தில் 112 பேர் உயிரிழந்தனர்..
1962 – அல்சீரியா ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
1967 – கெரில்லா இயக்கத் தலைவர்
சே குவேராவும் அவரது சகாக்களும் பொலிவியாவில் கைப்பற்றப்பட்டனர்.
1970 – வியட்நாம் போர்: பாரிசில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில்,
பொதுவுடைமைவாதிகள் அமெரிக்கத் தலைவர் நிக்சனின் அமைதி முன்மொழிவை நிராகரித்தனர்.
1973 – சூயசுக் கால்வாயின்
இசுரேலியப் பக்கத்தில் இடம்பெற்ற போரில் 140 இசுரேலியத் தாங்கிகள் எகிப்திய படைகளினால் அழிக்கப்பட்டது.
1982 – சொலிடாரிட்டி தொழிற்சங்கம் போலந்தில் தடை செய்யப்பட்டது.
1987 – விடுதலைப் புலிகள் இந்திய அமைதி காக்கும் படையின் சரக்கு வாகனத்தைத் தாக்கியதில் 8 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
1990 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு : எருசலேமில்
இசுரேலியக் காவல்துறையினர்
கோவில் மலையில் பாறைக் குவிமாடம் மசூதியைத் தாக்கியதில் 17 பாலத்தீனர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
1991 – குரோவாசியா ,
சுலோவீனியா மக்கள் ஆகியன
யுகோசுலாவியாவில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2001 – இத்தாலியின் மிலன் நகரில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 118 பேர் இறந்தனர்.
2005 – காசுமீரில் ஏற்பட்ட 7.6 அளவு
நிலநடுக்கத்தில் பாக்கித்தான் ,
இந்தியா , ஆப்கானித்தான் ஆகிய நாடுகளில் 86,000–87,351 பேர் வரையில் உயிரிழந்து, 69,000–75,266 வரையானோர் காயமடைந்தனர். 2.8 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர்.
2006 – காலி கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்கி 3 கடற்படைக் கலங்களை மூழ்கடித்தனர்.
2016 – மேத்யூ சூறாவளியின் தாக்கத்தால் இறந்தோரின் எண்ணிக்கை 900 ஐத் தாண்டியது.


பிறப்புகள்
1552 – மத்தேயோ ரீச்சி , இத்தாலிய இயேசுசபை மதப்பரப்புனர் (இ. 1610 )
1872 – மேரி பென்னிங்டன் , அமெரிக்க வேதியியலாளர், பொறியியலாளர் (இ. 1952 )
1873 – எய்னார் எர்ட்சுபிரங்கு , தென்மார்க்கு வேதியியலாளர், வானியலாளர் (இ. 1967 )
1908 – என். ஆர். இராசவரோதயம், இலங்கை அரசியல்வாதி (இ. 1963 )
1920 – பிராங்க் எர்பெர்ட், அமெரிக்க ஊடகவியலாளர், படப்பிடிப்பாளர் (இ.
1986 )
1922 – கோ. நா. இராமச்சந்திரன் , இந்திய அறிவியலாளர் (இ. 2001 )
1924 – திருநல்லூர் கருணாகரன் , இந்தியக் கவிஞர் (இ. 2006)
1926 – ராஜ்குமார் , இந்தித் திரைப்பட நடிகர் (இ. 1996 )
1932 – கென்னத் அப்பெல் , அமெரிக்கக் கணிதவியலாளர்
1935 – மில்கா சிங் , இந்திய தடகள விளையாட்டு வீரர்
1944 – ராஜ்ஸ்ரீ (இந்தி நடிகை) இந்தி திரைப்பட நடிகை
1949 – சிகர்னி வேவர் , அமெரிக்க நடிகை, தயாரிப்பாளர்
1950 – சு. கலிவரதன் , தமிழக எழுத்தாளர்
1969 – டைலன் நீல், கனடிய-அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
1970 – மேட் டாமன் , அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
1971 – பா. ராகவன் , தமிழக எழுத்தாளர்
1977 – லட்சுமி மஞ்சு , இந்திய-அமெரிக்கத் தொலைக்காட்சி நடிகை


இறப்புகள்
1638 – இரண்டாம் இராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1612 )
1936 – பிரேம்சந்த் , இந்திய உருது எழுத்தாளர் (பி. 1880 )
1958 – திருவாளப்புத்தூர் பசுபதிப் பிள்ளை, தமிழகத் தவில் கலைஞர் (பி. 1879 )
1959 – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , கவிஞர், பாடலாசிரியர் (பி. 1930 )
1967 – கிளமெண்ட் அட்லீ , ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1883 )
1974 – பி. ஆர். பந்துலு , தென்னிந்திய இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் (பி. 1911 )
1979 – ஜெயபிரகாஷ் நாராயண் , இந்திய அரசியல்வாதி (பி. 1902 )
2003 – வீரமணி ஐயர் , ஈழத்துக் கவிஞர் (பி. 1931 )
2010 – ஜான் பீட்டர் அக்ரா, அமெரிக்க வானியலாளர் (பி. 1948 )
2010 – ரெ. சண்முகம் , மலேசியக் கவிஞர் (பி. 1934 )
2011 – பாரத லக்சுமன் பிரேமச்சந்திர , இலங்கை அரசியல்வாதி (பி. 1956 )

சிறப்பு நாள்
உலக விண்வெளி வாரம் (அக்டோபர் 4–10)
இந்திய வான்படை நாள்
மர நாள் ( நமீபியா)
குழந்தைகள் நாள் ( ஈரான்)
விடுதலை நாள் ( குரோவாசியா, யுகோசுலாவியாவிடம் இருந்து, 1991)

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here

Total Pageviews