உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 28 ( October 28 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 28, 2018

உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 28 ( October 28 )




அக்டோபர் 28 ( October 28 )
கிரிகோரியன் ஆண்டின் 301 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 302 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 64 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
97 – உரோமைப் பேரரசர் நேர்வா தளபதி மார்க்கசு திராயானை தனது முடிக்குரிய வாரிசாக அறிவிக்க பிரடோரியன் காவலர்களால் கட்டாயப்படுத்தப்பட்டார்.
306 – மாக்செண்டியசு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
312 – மில்வியன் பாலத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசர் மாக்செண்டியசைத் தோற்கடித்து மேற்குலகின் தனித்த உரோமைப் பேரரசரானார்.
456 – போர்த்துகலின் பிராகா நகரை விசிகோத்து இனத்தவர்கள் சூறையாடி, நகரின் கிறித்தவக் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கினர்.
1420 – பெய்ஜிங் அதிகாரபூர்வமாக
மிங் அரசின் தலைநகரானது.
1449 – முதலாம் கிறித்தியான்
டென்மார்க்கின் அரசராக முடிசூடினார்.

1492 – கொலம்பசு புதிய உலகத்திற்கான தனது முதலாவது பயணத்தின்போது கியூபாவைக் கண்டுபிடித்தார்.
1636 – மாசச்சூசெட்சு குடியேற்றத்தில் முதலாவது
கல்லூரியை நிறுவுவதற்கான வாக்கெடுப்பை அடுத்து அமெரிக்காவின் ஆர்வர்டு பல்கலைக்கழகம் என இன்று அழைக்கப்படும் கல்லூரி நிறுவப்பட்டது.
1707 – சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஒன்சூ ,
சிகொக்கு , கியூசூ ஆகிய இடங்களில் 5,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்:
பாஸ்டனில் இருந்து மக்கள் வெளியேறுவதைத் தடுக்கும் பிரித்தானியச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
1834 – மேற்கு ஆஸ்திரேலியாவின் பிஞ்சாரா என்ற இடத்தில் பிரித்தானியக் குடியேறிகளினால் 30 நூங்கார் பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.
1886 – நியூயார்க் துறைமுகத்தில்
விடுதலைச் சிலையை அரசுத்தலைவர் குரோவர் கிளீவ்லாண்ட் திறந்து வைத்தார்.
1891 – சப்பானில் நோபி சமவெளியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 7,000 இற்கும் அதிகமானோர் உயிரிழ்ந்தனர்.
1904 – பனாமாவும் உருகுவையும் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டன.
1918 – முதலாம் உலகப் போர்: முன்னூறு ஆண்டுகள் ஆக்கிரமிப்பை அடுத்து,
ஆத்திரியா-அங்கேரியில் இருந்து
செக்கோசிலோவாக்கியா விடுதலையை அறிவித்தது.

1918 – புதிய போலந்து அரசு மேற்கு கலீசியாவில் உருவானதை அடுத்து, போலந்து-உக்ரைனியப் போர் ஆரம்பமானது.
1922 – பெனிட்டோ முசோலினி தலைமையில் இத்தாலிய
பாசிஸ்டுகள் இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் காலக்கெடுவை
கிரேக்கம் ஏற்க மறுத்ததை அடுத்து, கிரேக்க-இத்தாலியப் போர் ஆரம்பமானது. இத்தாலி
கிரேக்கத்தை அல்பேனியா ஊடாக ஊடுருவியது.
1942 – கனடா ஊடான அலாஸ்கா வரையான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
1949 – ஏர் பிரான்சு வானூர்தி
போர்த்துகலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 48 பேரும் உயிரிழந்தனர்.
1956 – எல்விஸ் பிரெஸ்லி தேசியத் தொலைக்காட்சியில் போலியோ தடுப்பூசியை ஏற்றிக் கொண்டார்.
1958 – 23-ம் யோவான்
திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி முடிவுக்கு வந்தது. சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்ற உத்தரவிட்டார்.
1965 – இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் "கிறித்தவமல்லாத சமயங்களுடனான திருச்சபையின் தொடர்புகள் தொடர்பான அறிவிப்பை" திருத்தந்தை ஆறாம் பவுல் அறிவித்தார். இதன்படி,
இயேசு கிறித்துவின் இறப்புக்கு
யூதர்கள் காரணம் என்ற 760-ஆண்டுக்கால அறிவிப்பு மீளப்பெறப்பட்டது.
1990 – ஜோர்ஜியாவில் வரலாற்றில் முதற்தடவையாக பல-கட்சி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது.
1995 – அசர்பைஜான் தலைநகர்
பக்கூவில் சுரங்கத் தொடருந்துப் பாதையில் ஏற்பட்ட தீவிபத்தில் 229 பேர் உயிரிழந்தனர், 265 பேர் காயமடைந்தனர்.
2006 – தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே 8 மாதங்களாகத் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுக்கள்
ஜெனீவாவில் மீண்டும் ஆரம்பமாயின.
2006 – 1930களில் சோவியத்
போல்செவிக் கம்யூனிஸ்டுகளால்
உக்ரேனின் பிக்கிவீனா காட்டில் கொலை செய்யப்பட்ட 817 உக்ரேனியர்களினது இறுதிக் கிரியைகள் அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றன.

2009 – பாக்கித்தான், பெசாவர் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 117 பேர் கொல்லப்பட்டனர்.
2014 – நாசாவின் சிக்னசு ஆளில்லா விண்கலம்
வர்ஜீனியாவில் இருந்து புறப்பட்டு சில நிமிட நேரத்தில் வெடித்துச் சிதறியது.

பிறப்புகள்
1466 – எராஸ்மஸ் , டச்சு மெய்யியலாளர் (இ. 1536 )
1845 – சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி , போலந்து இயற்பியலாளர் (இ. 1888 )
1867 – சகோதரி நிவேதிதை , அயர்லாந்து-இந்திய சமூக சேவையாளர், நூலாசிரியர் (இ.
1911 )
1892 – மணிலால் காந்தி , மகாத்மா காந்தியின் 2வது மகன், சமூக செயற்பாட்டாளர் (இ. 1956)
1897 – எடித் எட் , அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் (இ. 1981 )
1914 – யோனாசு சால்க் , அமெரிக்க உயிரியலாளர், மருத்துவர் (இ. 1995 )
1933 – கரிஞ்சா , பிரேசில் கால்பந்து வீரர் (இ. 1983 )
1955 – பில் கேட்ஸ் , மைக்ரோசாப்ட் நிறுவனர்
1955 – இந்திரா நூயி , இந்திய-அமெரிக்கத் தொழிலதிபர்

1956 – மகுமூத் அகமதிநெச்சாத் , ஈரானின் 6வது அரசுத்தலைவர்
1958 – அசோக் சவான் , மகாராட்டிராவின் 16வது முதல்வர்
1967 – ஜூலியா ராபர்ட்ஸ் , அமெரிக்க நடிகை
1978 – ஹரின் பெர்னான்டோ, இலங்கை அரசியல்வாதி
1979 – ஜவேத் கரீம், யூடியூப்பை அமைத்தவர்களில் ஒருவர்
1984 – பின் விட்டுரோக் , அமெரிக்க நடிகர்

இறப்புகள்

1627 – ஜஹாங்கீர் , முகலாயப் பேரரசர் (பி. 1569 )
1704 – ஜான் லாக், ஆங்கிலேய மெய்யியலாளர், மருத்துவர் (பி.
1632 )
1900 – மாக்ஸ் முல்லர் , செருமானிய மொழியியலாளர் (பி. 1823)
1978 – ருக்மணிதேவி , இலங்கை நடிகை, பாடகி (பி. 1923)
1981 – பி.ஸ்ரீ , தமிழக எழுத்தாளர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் (பி. 1886 )
1982 – இராபெர்ட் தெ’ஸ்கோர்ட் அட்கின்சன் , பிரித்தானிய வானியலாளர், இயற்பியலாளர் (பி.
1898 )
1983 – போல் சுவிங்சு , பெல்ஜிய வானியற்பியலாளர் (பி. 1906 )
1997 – மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார், வீணை இசைக்கலைஞர் (பி. 1920 )
2013 – ராஜேந்திர யாதவ், இந்திய எழுத்தாளர் (பி. 1929 )
2014 – மைக்கேல் சாட்டா , சாம்பியாவின் 5வது
அரசுத்தலைவர் (பி. 1937 )

சிறப்பு நாள்
செக்கோ-சிலோவாக் நாடு உருவான நாள் (1918 செக் குடியரசு , சிலவாக்கியா )

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews