'அட்மிஷன்' போட்டாச்சு : ஆசிரியர்களை காணோம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 23, 2018

Comments:0

'அட்மிஷன்' போட்டாச்சு : ஆசிரியர்களை காணோம்!


தரம் உயர்த்தப்பட்ட 200 அரசு பள்ளிகளில் அதிக மாணவர் சேர்ந்தும் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாத மர்மம் நீடிக்கிறது.நடப்பு ஆண்டில் 100 அரசு பள்ளிகள் மேல்நிலையாகவும், 100 பள்ளிகள் உயர்நிலையாகவும் ஆக.,7ல் தரம் உயர்த்தப்பட்டன. மேல்நிலையில் தலா ஆறு வீதம் 600, உயர்நிலையில் தலா ஐந்து வீதம் 500 ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது.ஆனால் மாணவர் சேர்க்கை முடிந்த நிலையில் இதுவரை பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மேல்நிலையில் தலைமை ஆசிரியர் பணியிடமும் காலியாக உள்ளது. சமீபத்தில் நடந்த பதவி உயர்வு கலந்தாய்விற்கு பின் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பல காலியாக உள்ளன. இதனால் மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாறும் மனநிலையில் உள்ளனர். இதை சரிக்கட்ட ஒரு ஆசிரியர் இரு பள்ளிகளில் (மாற்றுப் பணி) பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலர் பிரபாகரன், மாவட்ட செயலர் சரவணமுருகன் கூறுகையில், ''ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் கவலைக்கிடமாக உள்ளன. மாற்றுப் பணியால் இரு பள்ளியிலுமே பாடம் நடத்துவது சவாலாக உள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்,'' என்றனர்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews