அரசுத் துறையின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வது குறித்த, சிறப்புப் பயிற்சி முகாம் சேலத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி, அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் தென்காசி ஜவகர், இந்த திட்டம் மூலம், தமிழகத்தில் உள்ள 9 லட்சம்அரசு ஊழியர்களின் ஊதியமும், 7 லட்சம் ஓய்வூதியர்களின் ஊதியத்தொகை மற்றும் பணபலன்களும் உடனுக்குடன் கிடைக்கும் என்றார்.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Good website for govt educational staff
ReplyDelete