வரலாற்றில் இன்று: 27/07/2018: பாரதரத்னா ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்(2015) நினைவுதினம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 27, 2018

Comments:0

வரலாற்றில் இன்று: 27/07/2018: பாரதரத்னா ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்(2015) நினைவுதினம்




       •┈┈•❀🐯🇮🇳🕊❀•┈┈•
             
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
 
                   *_ஆடி 11_*
 
                   *_27.07.2018_* 
            *_வெள்ளிக்கிழமை_*

         *_வரலாற்றில் இன்று_*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

                *நிகழ்வுகள்*


•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1214 – பிரான்சில் இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பின் படைகள் இங்கிலாந்து மன்னர் ஜோனை வென்றன. ஜோனின் ஆஞ்சிவின் பேரரசு முடிவுக்கு வந்தது.

1299 – உஸ்மான் பே பண்டைய கிரேக்க நகரமான நிக்கோமீடியாவை ஆக்கிரமித்தான். இதுவே உதுமானிய நாட்டின் தொடக்கம் என கூறப்படுகிறது.

1302 – உதுமானியர் பாஃபியசு நகரில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்களை வென்றனர்.

1549 – இயேசு சபை போதகர் பிரான்சிஸ் சவேரியாரின் கப்பல் யப்பானை அடைந்தது.

1663 – அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கு ஆங்கிலேயக் கப்பல்களிலேயே பொருட்கள் அனைத்தும் அனுப்பப்பட வேண்டும் என்ற சட்டமூலம் இங்கிலாந்துநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிணைப்பின் பின்னர் இசுக்கொட்லாந்தும் இச்சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

1794 - பிரெஞ்சுப் புரட்சி: புரட்சியின் எதிரிகளாகக் கருதப்பட்ட 17,000 பேரத் தூக்கிலிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார்.

1862 – சான் பிரான்சிஸ்கோ வில் இருந்து பனாமா நோக்கிச் சென்று கொண்டிருந்த "கோல்டன் கேட்" என்ற கப்பல் மெக்சிக்கோவில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் கொல்லப்பட்டனர்.

1880 – இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போர்: மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப்கானியப்படைகள் முகம்மது அயூப் கான் தலைமையில் பிரித்தானியரைவென்றனர்.

1890 – இடச்சு ஓவியர் வின்சென்ட் வான் கோ தன்னைத்தானே சுட்டு, இரண்டு நாட்களில் இறந்தார்.

1919 – சிகாகோவில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 38 பேர் உயிரிழந்தனர், 537 பேர் காயமடைந்தனர்.

1921 – இயக்குநீர் இன்சுலின் இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதாக டொராண்டோ பல்கலைக்கழகஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகள் எகிப்தில் ஆசு நாடுகளின் இறுதி முன்னகர்வை வெற்றிகரமாகத் தடுத்தன.

1953 – கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. தென் கொரியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், உடன்பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது.

1955 – ஆஸ்திரியாவில் 1945 மே முதல் நிலை கொண்டிருந்த நட்பு நாடுகளின் படைகள் அங்கிருந்து விலகின.

1955 – இலண்டனில் இருந்து இசுதான்புல் சென்று கொண்டிருந்த 'எல் அல்' விமானம் பல்கேரியாவின்வான் பரப்பில் இரண்டு போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதில், அனைத்து 58 பயணிகளும் உயிரிழந்தனர்.

1964 – வியட்நாம் போர்: அமெரிக்கா மேலும் 5,000 இராணுவ ஆலோசகர்களை தென் வியட்நாமிற்கு அனுப்பியது.

1975 – விடுதலைப்புலிகளின்முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாண மாநகரமுதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.

1983 – கறுப்பு யூலை: வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

1989 – கொரிய விமானம் திரிப்பொலிவிமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் மோதியதில் விமானத்தில் இருந்த 199 பேரில் 75 பேரும் தரையில் நால்வரும் உயிரிழந்தனர்.

1990 – பெலருஸ் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.

1990 – திரினிடாட் டொபாகோவில்இசுலாமியத் தீவிரவாதிகள் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களை பணயக் கைதிகளாக ஆறு நாட்கள் வைத்திருந்தனர்.

1997 – அல்சீரியாவில் "சி செரூக்" என்ற இடத்தில் 50 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

2002 – உக்ரைனின் லிவீவ் நகரில் வான் களியாட்ட நிகழ்ச்சியின் போது சுகோய் எஸ்.யு-27 போர் விமானம் மக்களின் மீது வீழ்ந்ததில் 85 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்தனர்.

2015 – இந்திய பஞ்சாப் பகுதியில் குருதாசுபூர் காவல் நிலையம் தாக்கப்பட்டதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

                 *பிறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1801 – ஜார்ஜ் பிடெல் ஏரி, ஆங்கிலேயக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1892)

1853 – விளாதிமிர் கொரலென்கோ, உக்ரைனிய எழுத்தாளர், ஊடகவியலாளர் (இ. 1921)

1876 – தேசிக விநாயகம்பிள்ளை, தமிழகக் கவிஞர் (இ. 1954)

1879 – சோமசுந்தர பாரதியார், தமிழகத் தமிழறிஞர் (இ. 1959)

1897 – ச. வெள்ளைச்சாமி, கொடைவள்ளல், சமூக சேவகர் (இ. 1983)

1907 – மௌனி, தமிழக எழுத்தாளர் (இ. 1985)

1921 – காரி டேவிஸ், அமெரிக்க விமானி, செயற்பாட்டாளர் (இ. 2013)

1927 – செல்லையா இராசதுரை, இலங்கை அரசியல்வாதி

1942 – திருச்சி சங்கரன், தமிழக மிருதங்கக் கலைஞர்

1955 – அலன் போடர், ஆத்திரேலியத் துடுப்பாளர்

1963 – சித்ரா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி

1965 – சசிகலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

1967 – ராகுல் போஸ், இந்திய நடிகர்

1972 – மாயா ருடால்ப், அமெரிக்க நடிகை

1977 – ஜானத்தன் ரீஸ் மயர்ஸ், ஐரிய நடிகர்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

                  *இறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1844 – ஜான் டால்ட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1776)

1929 – ரவுல் பிக்டே, சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (பி. 1846)

1953 – சோமசுந்தரப் புலவர், ஈழத்துப் புலவர் (பி. 1878)

1960 – யூலி விண்டர் கான்சன், தென்மார்க்கு-சுவிட்சர்லாந்து வானியலாளர் (பி. 1890)

1963 – கர்ரெட் மார்கன், ஆப்பிரிக்க-அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (பி. 1877)

1975 – அல்பிரட் துரையப்பா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1926)

1980 – முகம்மத் ரிசா ஷா பஹ்லவி, ஈரானிய மன்னர் (பி. 1919)

1987 – சலீம் அலி, இந்தியப் பறவையியல் வல்லுநர் (பி. 1896)

1988 – மீ. கல்யாணசுந்தரம், தமிழக அரசியல்வாதி (பி. 1909)

1994 – கெவின் கார்ட்டர், தென்னாப்பிரிக்க ஊடகவியலாளர் (பி. 1960)

2015 – ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், தமிழக அறிவியலாளர், இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் (பி. 1931)

2016 – ஞானக்கூத்தன், தமிழகக் கவிஞர் (பி. 1938)

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

                *சிறப்பு நாள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

விடுதலைப் போர் வெற்றி நாள் (வட கொரியா)


•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•


👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews