புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில், எம்.பில்., மற்றும் சான்றிதழ் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என,
அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவன இயக்குனர் பக்தவச்சல பாரதி வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில், 2018-19ம் ஆண்டிற்கான எம்.பில்., முழுநேர படிப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இலக்கியம், மானிடவியல், மொழியியல், நாட்டுப்புறவியல் போன்ற பாடப்பிரிவுகளில் எம்.பில்., பட்டம் பயில விரும்பும் மாணவர்கள்,
முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் 50 சதவீதம் பெற்றிருந்தால் போதுமானது.
பதிவாளர், தமிழ்ப் பல்லைக்கழகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்குரூ. 300க்கான வரைவோலை இணைக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் பழங்குடி வகுப்பினர் ஜாதி சான்றிதழை இணைத்துரூ.150க்கு வரைவோலை எடுத்தால் போதுமானது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஜூலை
4ம் தேதி, மாலை 5:00 மணிக்குள்,
இயக்குனர்,
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்,
லாஸ்பேட்டை, புதுச்சேரி-8
என்ற முகவரியில் ஒப்படைக்க வேண்டும். மேலும் தகவல் பெற 0413 2255817, 2255827 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்நிறுவனத்தில் மானிடவியல், மொழியியல், சங்க இலக்கியம், நாட்டுப்புறவியல் தொடர்பான சான்றிதழ் வகுப்புகளும் மாலை நேரத்தில் நடைபெற உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.