ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு பணி மாறுதல் வழங்க முடியாது- அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 09, 2018

Comments:0

ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு பணி மாறுதல் வழங்க முடியாது- அமைச்சர் செங்கோட்டையன்




கோபி அருகே உள்ள புதுவள்ளியம் பாளையத்தில் ரூ.4½ லட்சம் செலவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். 

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். சத்தியபாமா எம்.பி., சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- 

தமிழகத்தில் 500 பட்டய கணக்காயர்கள் மூலம் பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சி.ஏ. படிக்க முதன்மை தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.▪கணினிக்கல்வி▪ இதன் மூலம் 20 ஆயிரம் மாணவ- மாணவிகள் பயன் பெறுவர்.துணி வடிவமைப்பு பயிற்சி, ஆஸ்பத்திரி மேனேஜ்மெண்ட் உள்பட 12 தொழில் படிப்புகள் நடப்பாண்டில் மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட உள்ளது. பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களை சிறந்த கல்வியாளர்களாக்க ஐ.ஐ.டி. மூலம் பேராசிரியர்களை கொண்டு பாடம் நடத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த ஒரு தேர்வையும் மாணவர்கள் எதிர்கொண்டு எழுதலாம் 


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews