சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு 2 கட்டங்களாக செய்முறைத் தேர்வு கள் நடத்தப்படும் என்று முதன்மை கல்வி அதிகாரி வி.எம்.மனோகர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வை சென்னை மாவட்டத்தில் 50,595 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களில் 37,202 பேர் செய்முறைத் தேர்வில் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை மாவட்டத்தில் மொத்தமுள்ள 410 மேல்நிலைப் பள்ளிகளில் முதல் கட்ட மாக 212 பள்ளிகளுக்கும் 2-வது கட்டமாக 198 பள்ளிகளுக்கும் செய்முறைத் தேர்வு மையமாக அனுமதிக்கப்பட்ட 308 மையங்களில் செய்முறைத் தேர்வு நடைபெறும். முதல் கட்டத் தேர்வு பிப்ரவரி 2 முதல் 8-ம் தேதி வரையும் 2-வது கட்டத் தேர்வு பிப்ரவரி 9 முதல் 14-ம் தேதி வரையும் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Search This Blog
Monday, February 05, 2018
Comments:0
சென்னையில் 2 கட்டமாக பிளஸ் 2 செய்முறைத் தேர்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.