Breaking

Sunday, May 10, 2026

மங்கலான விடைத்தாள்கள் - அவதிப்படும் ஆசிரியர்கள்



மங்கலான விடைத்தாள்கள் - அவதிப்படும் ஆசிரியர்கள் Faint Answer Sheets — Teachers Struggle

சி.பி.எஸ்.இ, புதிய ஆன் - ஸ்கிரீன் மார்க்கிங் முறையை அறிமுகப்படுத்தி உள்ள நிலையில் இந்த முறையை கையாள்வதில் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இந்த மாதம் சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், டெல்லி மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் வாரியத்தின் புதிய டிஜிட்டல் மதிப்பீட்டு முறையைக் கையாள்வதில் திணறி வருகின்றனர்.

மங்கலான விடைத்தாள்கள், தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் மீண்டும் மீண்டும் சரிபார்க்க வேண்டிய சூழல் போன்ற புகார்கள் எழுந்துள்ளன. இது தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தனது அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பல தசாப்தங்களாகப் பின்பற்றி வந்த காகித வழி மதிப்பீட்டு முறையை மாற்றி, புதிய ஆன் - ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) முறையை அறிமுகப்படுத்தியது. இந்த முறையின் கீழ், விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு பாதுகாப்பான ஆன்லைன் தளத்தில் பதிவேற்றப்படுகின்றன.

ஆசிரியர்கள் அந்தத் தளத்தில் லாக் - இன் செய்து தொலைதூரத்தில் இருந்தே தாள்களைத் திருத்துகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog