வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு சுங்கக் கட்டண விலக்களிக்கக் கோரிக்கை Request for Toll Exemption for Polling Station Officials
மதுரை, மார்ச் 24: வாக்குப் பதிவு தொடர்பான பயிற்சி, தேர்தல் பணி ஆகியவற்றுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்களிக்க வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசி ரியர் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலர் பெ.சீனிவா சன் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அவர் செவ் வாய்க்கிழமை வெளியிட்ட செய் திக் குறிப்பு:
சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச் சாவடி அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள்தான் பணி யாற்ற உள்ளனர். இந்த நிலை யில், வாக்குச் சாவடி அலுவலர் களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதற்காக, ஆசிரியர்கள், அலு வலர்கள் தங்களது சொந்த வாக னங்களில் செல்ல நேரிடும். தேர் தல் பணி நிமித்தமாகவும் வாக் குச் சாவடி அலுவலர்கள் தங்க ளது சொந்த வாகனத்தில் செல்ல நேரிடும்.
எனவே, சொந்த வாகனங்க ளில் செல்லும் அலுவலர்களுக்கு பயிற்சி நாள்கள், தேர்தல் நாள்க ளில் சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்களிக்க வேண்டும். மேலும், வாக்குப்பதிவின் போது, அந் தந்த வாக்குச் சாவடி அலுவலர்க ளுக்கு உணவு சாப்பிடுவதற்காக போதிய நேரம் ஒதுக்க வேண் டும்.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட தேர்தல் நடத்தும் அலு வலரும், மாவட்ட ஆட்சியரு மான கே.ஜே. பிரவீன்குமாருக்கு கடிதம் அனுப்பப்பட்டது என் றார் அவர்.
This newspaper article discusses a demand for toll fee exemption for election officials in Madurai, Tamil Nadu.
The Tamil Nadu Primary School Teachers Association requested toll fee waivers for teachers and government officials using personal vehicles for election duty and training.
A formal petition was sent to the Madurai District Collector and District Election Officer regarding this issue.
The demand includes toll exemption during training days and election days, along with dedicated time for meals during polling.pe
Thursday, March 26, 2026
வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு சுங்கக் கட்டண விலக்களிக்கக் கோரிக்கை
polling station
Labels:
polling centers,
Polling officers,
Polling Personnel,
Polling Personnel Form,
polling station
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.