Breaking

Tuesday, July 02, 2024

இன்றைய டிட்டோஜாக் உயர் மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அவசர முடிவுகள்!!!



இன்றைய டிட்டோஜாக் உயர் மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அவசர முடிவுகள்!!!

இன்று நடைபெற்ற டிட்டோஜாக் உயர் மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட முடிவை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

டிட்டோஜாக் கூட்ட முடிவு

இன்று 02-07-24 காலை நடந்த டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு காணொளி கூட்டத்தில் அவசிய,அவசர காரணமாக கீழ்கண்ட முடிவுகளை டிட்டோஜாக் எடுத்துள்ளது. தொடக்கக்கல்வி துறையின் இன அழிப்பை தடுக்க வேண்டிய கடமையும் உரிமையும் ஒவ்வொருக்கும் உண்டு.

03-07-24 அன்று நடைபெறும் மறியலில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்கும் வகையில் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து பள்ளியின் சாவியை வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களிடம் இன்றே ஒப்படைக்க வேண்டும்.*

கலந்தாய்வு நடைபெறும் அனைத்து மையங்களின் முன்பாக மறியல் நடத்துவது என்று தீர்மானிக்க பட்டுள்ளது. இதில் அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவசரமாக டிட்டோஜாக் உயர்மட்டக்குழு முடிவு கேட்டுக் கொள்கிறது.

இரா.தாஸ்

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog