Breaking

Friday, January 26, 2024

26.01.2024 - கிராம சபைக் கூட்டத்தில் பள்ளியின் பங்கு

26.01.2024 - கிராம சபைக் கூட்டத்தில் பள்ளியின் பங்கு

கிராம சபைக் கூட்டம் - ஜனவரி 26 - 2024

ஜனவரி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் கிராம சபைக் கூட்டத்தில் பள்ளியின் சார்பில் தலைமையாசிரியர் , ஆசிரியர் பிரதிநிதி , பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

பள்ளி வளர்ச்சி , கற்றல் கற்பித்தல் , உட்கட்டமைப்பு , மாணவர் பாதுகாப்பு , இடைநிற்றல் மற்றும் உயர்கல்வி தொடர்பாக பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களை கிராம சபைக் கூட்டத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தின் தீர்மானங்களை கிராமசபைக் கூட்டத்தில் முக்கிய கூட்டப் பொருளில் ஒன்றாக இணைக்க வேண்டும்.


கிராம பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் தங்கள் பள்ளி சார்ந்த தேவைகள் பூர்த்தி செய்யவும் மற்றும் பிரச்சனைகள் களையவும் ஒத்துழைப்பு வழங்க கோருதல்.

கிராம சபைக் கூட்டத்தில் கல்வித்துறை சார்ந்த பார்வை அலுவலர்கள் ( CEO , DEOs , APOs , BEOs , DCs மற்றும் BRTEs ) மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்கள் அனைவரும் பார்வையாளர்களாக பங்கேற்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog