Breaking

Thursday, October 26, 2023

அகவிலைப்படி உயர்வை வழங்கியதற்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றி அறிக்கை வெளியீடு

*தமிழக அரசுக்கு நன்றி*

*இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப் படியை 4% ஜூலை முதல் முன்தேதியிட்டு வழங்கியதற்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.*

*ஏற்கனவே கூரியது போல் ஒன்றிய அரசு அகவிலைப்படி வழங்கும் போதெல்லாம்,அதே தேதியில் வழங்க மாநில அரசு உறுதி அளித்த நிலையில்*

*சொன்னதைச் செய்வோம்; செய்வதை சொல்வோம்*

*என்ற மாண்புமிகு தமிழக முதல்வர் அகவிலைப்படியை அறிவித்துள்ளார்கள்,மேலும் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றுவதாக கூறி உள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.*


*மேலும் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியம், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு,சரண் விடுப்பு, ஊக்க ஊதிய உயர்வு, போன்ற கோரிக்கைகளை விரைவாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்*,

*மேலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடன் நிரப்பிடவும், தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் தடையாக உள்ள சட்ட சிக்கலை நீக்கி பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக் கொள்கிறது.*

*இரா.தாஸ்*

*பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்*

*தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog