தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 3 அறிக்கைகள் - தேதி: 15.06.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 16, 2023

Comments:0

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 3 அறிக்கைகள் - தேதி: 15.06.2023

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு : ஜே.எஸ்.ஆர்.மாளிகை, 78, பெல்சு சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600 005. TAMILNADU ELEMENTARY SCHOOL TEACHERS' FEDERATION

தொடக்கக்கல்வித் துறையின் கீழ் வரும் விழுப்புரம் மாவட்டக்கல்வி அலுவலகம் (தொடக்கக்கல்வி) தற்போது அடிப்படை வசதியின்றி காமராஜ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது. பலமுறை முறையிட்டும் மீண்டும் முதன்மைக் கல்வி அலுவலகக் கட்டிடத்தில் பழையபடி இயங்கி வந்த மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகக் கட்டிடம் ஒதுக்கி தரவேண்டி கடிதம் தந்தும் இதுவரை ஆவனச்செய்யப்படவில்லை. தற்போது பெண் ஆசிரியர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்கள் அடிப்படை வசதி, போக்குவரத்து வசதியின்றி அவதிப்படுகின்றனர். எனவே தாங்கள் மீண்டும் பழையயிடத்திற்கே மாற்றம் செய்து தர பெரிதும் வேண்டுகிறேன்.
தொடக்கக்கல்வி - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - மணப்பாறை ஒன்றியம் - இடையப்பட்டி- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - தொடக்க நிலை வகுப்பு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பணியிடம் அனுமதிக்க கோருதல் சார்பு. 1.திருச்சிராப்பள்ளி மாவட்டக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

பார்வை:

ந.க.எண் 1515/ ஆ3/2023 நாள்:25.05.2023. 2. வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண் 847/2/2023 sir: 31.05.2023.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பறை ஒன்றியம் இடையப்பட்டி ஊராட்டசி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு முடிய 31.07.2022 அன்று மாணவரின் எண்ணிக்கை 139. தொடக்க நிலையில் மூன்று இடைநிலையாசிரியர்கள் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர். மாணவர் – ஆசிரியர் விகிதம் அடிப்படையில் 2 இடைநிலை ஆசிரியர் பணியிடம் கூடுதலாக அனுமதிக்க வேண்டும்.

பார்வை 1 மற்றும் 2 ல் கண்ட அலுவலர்களின் செயல்முறைகளின் படி இப்பள்ளிக்கு பணி நிரவல் மூலம் ஒரு இடைநிலையாசிரியர் பணியிடமே 1.06.2023 அன்று அனுமதிக்கப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கையின் படி மேலும் ஒரு இடைநிலையாசிரியர் பணியிடம் அனுமதிக்கலாம்
சிவகங்கை மாவட்டம்- இளையான்குடி வட்டாரம்- இளையான்குடி 2 ஆம் எண் பள்ளியை வட்டாரக் கல்வி அலுவலகம் ஆக்கிரமித்தலை தடுத்திட வேண்டுதல் சார்பு:

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி எண் 2 ல் செயல்பட்டு வரும் கல்விக்கட்டிடம் 3 லட்சம் செலவில் புணரமைக்கப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு வரும் நேரத்தில் வட்டரக் கல்வி அலுவலர்கள் அக்கட்டடத்தை கையகப்படுத்தியதுடன் வட்டாரக் கல்வியலுவலகத்தை அங்கு செயல்பட வைத்துள்ளனர். இதனால் மாணவர்களின் பயன்பாட்டிற்கு அக்கட்டிடம் தரப்படாமல் மாணவர்கள் கல்வி நிலை கேள்விக்குறியாகும் நிலையிலுள்ளது. எனவே தாங்கள் அக்கட்டிடத்தை பள்ளிக்கே பெற்றுத்தருமாறு பெரிதும் வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews