Breaking

Tuesday, May 09, 2023

12ம் தேதிமுதல் 12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்

12 ம் வகுப்பு மாணவ மாணவிகள் மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் வழியாக வரும் 12-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

12 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் 12 ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் இன்று காலை 11 மணிமுதல் வரும் சனிக்கிழமை மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும் மேலும், விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும் என்றும் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும், மதிப்பெண் பட்டியலை பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் வழியாக வரும் 12-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் நகலுக்கு ரூ275 ரூபாயும், மறுகூட்டலுக்கு ரூ205 ரூபாயும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ305 கட்டணமாக செலுத்த வேண்டும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog