Breaking

Wednesday, March 01, 2023

இன்று கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி: உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைப்பு

இன்று கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி: உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைப்பு

மாநில சிறுபான்மையினா் ஆணையம் நடத்தும் அனைத்துக் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் புதன்கிழமை (மாா்ச் 1) நடைபெறுகின்றன.

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் தமிழகத்திலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டிகள் புதன்கிழமை (மாா்ச் 1) நடைபெறுகின்றன.

இதை தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சென்னை புதுக்கல்லூரியில் காலை 10.30 மணிக்கு தொடங்கி வைக்கிறாா்.

நிகழ்வில், உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமை வகிக்கிறாா். சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் முன்னிலை வகிக்கிறாா்.

மேலும், நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சா.பீட்டா் அல்போன்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog