Breaking

Monday, February 13, 2023

TNPSC - சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு; சென்னையில் இன்று நடக்கிறது!



இன்று சுகாதார அலுவலர் பதவிக்கான தேர்வு Examination for the post of health officer on 13th

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு பொது சுகாதார பணிகளில் அடங்கிய 12 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி வெளியிட்டது.

இத்தேர்வுக்கு 593 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் ஆண்கள் 327 பேர், பெண்கள் 266 பேர் அடங்குவர். இப்பதவிகளுக்கான கணினி வழி தேர்வு வருகிற 13ம் தேதி நடக்கிறது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு நடக்கிறது.

முதல் தாள் தேர்வில் கம்யூனிட்டி மெடிசின் (பட்டப்படிப்பு தரம்) தேர்வு நடக்கிறது. இதில் 200 வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண் வழங்கப்படும்.

பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை 2ம் தாள் தேர்வும் நடக்கிறது. அதாவது பகுதி ‘‘அ” வில் கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வும் (10ம் வகுப்பு தரம்), பகுதி ‘‘ஆ’’ பொது அறிவு (பட்டப்படிப்பு தரம்) தேர்வும் நடக்கிறது. சென்னையில் மட்டும் நடக்கும் தேர்வை 593 பேர் எழுதுகின்றனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog