5,318 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து : மின்வாரியம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 05, 2022

Comments:0

5,318 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து : மின்வாரியம்

5,318 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ரத்து செய்வதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இளநிலை உதவியாளர் , உதவி பொறியாளர் உட்பட 5,318 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை ரத்து செய்வதாகவும், கணினி வழித் தேர்வு ரத்து செய்யப்படுவதுடன் , கட்டணமும் திருப்பித் தரப்படும் எனவும் வாரியம் அறிவித்துள்ளது.

அரசு பணியாளர்கள் தேர்வை TNPSC நடத்தும் என்பதால் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்தாண்டு ஏப்ரல் , மே மாதங்களில் கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

5,318 காலி பணியிடங்களை நிரப்ப மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணை ரத்து

* அரசு பணி ஆட்சேர்ப்பு பணிகளை டி.என்.பி.எஸ்.சி. மட்டுமே மேற்கொள்ளும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் ரத்து

* தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்டணம் திருப்பித் தரப்படும் - மின்வாரியம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews