Breaking

Sunday, May 15, 2022

மாணவர் சேர்க்கைக்கு பழங்குடி பிரிவினர் காலியிடங்கள்

கேந்திரிய வித்யாலயாவில், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, பழங்குடியினர் பிரிவில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., வளாக கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மாணிக்கசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள கே.வி.,யில் ஒன்றாம் வகுப்புக்கு, ஆன்லைன் வழி விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடக்கிறது. இதில், பழங்குடியினர் பிரிவுக்கான சில இடங்கள் மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களில் சேர விருப்பம் உள்ளவர்கள், பள்ளிகளில் நேரடியாக விண்ணப்பம் அளிக்கலாம்.

பள்ளி அலுவலகத்தில், வரும், 18ம் தேதி வரை, காலை 9:30 மணியில் இருந்து பகல், 3:30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு, 73051 60907என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog