வேளாண் பல்கலைக்கழக பட்டயப்படிப்பு கலந்தாய்வு: 2 நாளில் ஆயிரம் இடங்கள் நிரம்பின - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 08, 2022

Comments:0

வேளாண் பல்கலைக்கழக பட்டயப்படிப்பு கலந்தாய்வு: 2 நாளில் ஆயிரம் இடங்கள் நிரம்பின

வேளாண் பல்கலைக்கழக பட்டயப்படிப்பு கலந்தாய்வு: 2 நாளில் ஆயிரம் இடங்கள் நிரம்பின 2022-04-08@ 00:37:04 கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு நாட்கள் நடந்த பட்டயப்படிப்பிற்கான கலந்தாய்வில் ஆயிரம் இடங்கள் நிரம்பின. கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்கீழ் 7 அரசு கல்லூரிகள், 10 தனியார் கல்லூரிகளில் பட்டயப்படிப்பு வழங்கப்படுகிறது. இந்த இடங்களை இணையதள கலந்தாய்வின் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலந்தாய்விற்கு 3,800 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியது. 9ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது. கடந்த இரண்டு நாட்கள் நடந்த கலந்தாய்வின் மூலம் ஆயிரம் மாணவர்கள் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். தொடர்ந்து, இன்றும் நாளையும் கலந்தாய்வு நடக்கிறது. இதன் மூலம் அனைத்து இடங்களும் நிரப்பப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விண்ணப்பதாரர்கள் tnau.ucanapply.com என்ற முகவரில் சென்று நாளை மாலை 5 மணி வரை தங்கள் கல்லூரி மற்றும் பாட விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம். மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக முதன்மையர் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.
Agricultural University Bachelor Seminar: Thousands of seats filled in 2 days Coimbatore: Thousands of seats have been filled in the last two days of discussions for the charter course at the Tamil Nadu Agricultural University. Under the Tamil Nadu Agricultural University, Coimbatore, 7 government colleges and 10 private colleges offer diplomas. Steps have been taken to fill these vacancies through internet consultation. In this case, 3,800 people have applied for the consultation. The consultation for them started yesterday. The consultation continues until the 9th.

Thousands of students have chosen places for themselves through consultations over the past two days. Continuing, the consultation continues today and tomorrow. University officials said all the seats would be filled by this. Also, applicants can go to tnau.ucanapply.com and change their college and course options until 5pm tomorrow. The certificate verification schedule for students will be announced soon, said Kalyanasundaram, the university's principal and head of student admissions. வேளாண் பல்கலைக்கழக பட்டயப்படிப்பு கலந்தாய்வு: 2 நாளில் ஆயிரம் இடங்கள் நிரம்பின

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு நாட்கள் நடந்த பட்டயப்படிப்பிற்கான கலந்தாய்வில் ஆயிரம் இடங்கள் நிரம்பின. கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்கீழ் 7 அரசு கல்லூரிகள், 10 தனியார் கல்லூரிகளில் பட்டயப்படிப்பு வழங்கப்படுகிறது. இந்த இடங்களை இணையதள கலந்தாய்வின் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலந்தாய்விற்கு 3,800 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியது. 9ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது. கடந்த இரண்டு நாட்கள் நடந்த கலந்தாய்வின் மூலம் ஆயிரம் மாணவர்கள் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். தொடர்ந்து, இன்றும் நாளையும் கலந்தாய்வு நடக்கிறது. இதன் மூலம் அனைத்து இடங்களும் நிரப்பப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விண்ணப்பதாரர்கள் tnau.ucanapply.com என்ற முகவரில் சென்று நாளை மாலை 5 மணி வரை தங்கள் கல்லூரி மற்றும் பாட விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம். மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக முதன்மையர் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews