தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் - 444 காவல் சார்பு ஆய்வாளர் - - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 03, 2022

Comments:0

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் - 444 காவல் சார்பு ஆய்வாளர் -

03.03.2022 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் , காவல்துறையில் காலியாகவுள்ள 444 காவல் சார்பு ஆய்வாளர் ( தாலுகா மற்றும் ஆயுதப்படை ) ( ஆண் , பெண் மற்றும் திருநங்கை ) பதவிகளுக்கான நேரடித் தேர்வுக்கான அறிவிக்கை எண் : 01 / 2022 - ஐ 08.03.2022 அன்று வெளியிடப்படவுள்ளது.

விண்ணப்பதாரர்கள் இந்த தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இணையவழி விண்ணப்பம் விண்ணப்பிக்க துவங்கும் நாள் : 08.03.2022. இணையவழி விண்ணப்பம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 07.04.2022. இவ்வாரியம் முதன்முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வை அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி நடத்தவிருக்கிறது.

இவ்வாரியத்தில் 08.03.2022 முதல் 07.04.2022 வரை கட்டுப்பாட்டு அறையில் " உதவி மையம் " வாரத்தின் ஏழு நாட்களும் செயல்படும். இதேபோன்று உதவி மையங்கள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாநகர காவல் ஆணையாளர் அலுவலகங்களிலும் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் , அலுவலக பணி நேரத்தில் செயல்படும். இணையவழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் / தெளிவுகளுக்கு இந்த " உதவி மையத்தின் " சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி தேர்வுக்கான தகுதி அளவுகோல் , தேர்வு செயல்முறை , எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி கேள்விகள் போன்ற கூடுதல் விவரங்கள் இவ்வாரிய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ( தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அறை எண்கள் : 044-40016200 , 044-28413658 , 9499008445 , 9176243899 மற்றும் 978903725 ) , தலைவர் , தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் , சென்னை -8 .

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews