Breaking

Thursday, March 24, 2022

கல்வி துறைக்கு பட்ஜெட்டில் முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடி

கல்வி துறைக்கு பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடானது முதல்முறையாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என கல்வி துறை இணையமைச்சா் சுபாஷ் சா்காா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மாநிலங்களவையில் மேலும் கூறியது:

பட்ஜெட்டில் கல்வி துறைக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்துள்ளது இதுவே முதல்முறை.

மேலும், ஆன்லைன் வழியாக மாணவா்கள் கல்வி கற்பதற்கு 15-ஆவது நிதிக் குழு ரூ.6,143 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. தொழில்முறை படிப்புகளுக்கான வளா்ச்சிக்கும் இந்த தொகை செலவிடப்படும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog