அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் " பள்ளி பரிமாற்றுத்திட்டம் " செயல்படுத்த நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 10, 2022

Comments:0

அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் " பள்ளி பரிமாற்றுத்திட்டம் " செயல்படுத்த நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.

ஒருங்கிணைந்தபள்ளிக் கல்வியின் கீழ் , 2021-22 ஆம் கல்வியாண்டில் பார்வையில் காணும் மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஏற்பளிப்புக் குழுக் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளின்படி , Quality Components ( Elementary ) என்ற தலைப்பில் , நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளிப் பரிமாற்றம் மேற்கொள்ளும் வகையில் பள்ளிப் பரிமாற்றுத்திட்டம் ( Twining of Schools ) என்ற செயல்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் எனமொத்தம் 16432 பள்ளிகளுக்கு ( ஒரு பள்ளிக்கு ரூ .1000 / - வீதம் ) ரூ .164.32 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2016-17ஆம் கல்வியாண்டு முதல் பள்ளிப் பரிமாற்றுத்திட்டம் ” அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | BT to PG பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பாக அப்பணியிடத்தில் ( 2%) அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் (To be Considered) என சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணை - நாள் : 07.02.2022

கிராமப்புற பள்ளிகளை நகர்ப்புறப் பள்ளிகளுடன் இணைப்பதே இச்செயல்பாட்டின் உரிய நோக்கமாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பரிமாற்றுப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடி இணைப்பு பள்ளிகளில் வசதிகள் , கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் மற்றும் களப்பயணமாக அப்பள்ளியை சுற்றியுள்ள வளங்கள் , பல்வேறு இயற்கை சூழல்கள் , அலுவலகங்கள் , வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் தொழிற்சாலைகள்ஆகியவற்றை பார்த்து புதிய அனுபவம் பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews