Breaking

Wednesday, January 26, 2022

உடல் பருமனால் விரக்தி; பள்ளி மாணவி தற்கொலை

திருச்சி: உடல் பருமனால் விரக்தியடைந்த பள்ளி மாணவி, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி, கன்டோன்மென்ட் அலெக்சாண்ட்ரியா ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஷர்மிளா. எஸ்.பி.ஐ., வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வரும் இவர், சில ஆண்டுகளாக, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த மகள் ஷிவானி, 13, தாயுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வீடு திரும்பிய ஷர்மிளா, கதவை தட்டியுள்ளார். மகள் திறக்காததால், ஜன்னல் வழியாக பார்த்த போது, ஷிவானி மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. போலீசார் விசாரணையில், ஷிவானி உடல் பருமனாக இருந்ததால், தாயிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஷிவானி, தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog