ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் செபி நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.10.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 19, 2021

Comments:0

ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் செபி நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.10.2021

"மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (செபி) காலியாக உள்ள பணியிடங்களை நேர்முகத் தேர்வு நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்((Securities and Exchange Board of India) 

பணி:  Whole Time Member

காலியிடங்கள்: 02

தகுதி: பொருளாதாரம் அல்லது தொழில் அல்லது நிதியியல் பாடங்களில் முதுகலை பட்டம் அல்லது சிஜிபிஏ அல்லது அதற்கு இணையான தகுதியில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.35,000 - ரூ.45,000

வயதுவரம்பு: 31.03.2021 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:     தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.sebi.gov.in/index.html என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டயதில்லை. 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.10.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=194 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews