Breaking

Wednesday, September 01, 2021

12ம் வகுப்பு வினா தாள் முறை மாற்றமா?? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி!

12ம் வகுப்பு வினா தாள் முறையை மாற்றுவது குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

12ம் வகுப்பு பாடங்கள் குறைக்கப்பட்டாலும், வினா தாள் முறையை மாற்றுவது குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை ஹோபர்ட் பள்ளியில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், எழிலன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், கொரோனா காலத்தில், கட்டணத்தை காரணம் காட்டி, மாணவர்களின் மாற்று சான்றிதழ் தர மறுப்பதாக புகார்கள் வந்தால், அந்த தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog