Breaking

Sunday, August 15, 2021

ராணுவ கல்லுாரி நுழைவு தேர்வுக்கு விண்ணப்ப பதிவு

இந்திய ராணுவ கல்லுாரியில் சேர்வதற்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இந்திய ராணுவ கல்லுாரி செயல்படுகிறது.

8ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், 9ம் வகுப்பு முதல் இந்திய ராணுவ கல்லுாரியில் சேர்ந்து படிக்கலாம். இதில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, ராணுவ கல்லுாரி நடத்தும் நுழைவு தேர்வு டிசம்பர் 18ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, www.rimc.gov.in என்ற இணையதளத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.

அக்., 30 வரை விண்ணப்பம் பதிவு செய்யலாம். இதற்கான அறிவிக்கையை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog