10, 11 வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 07, 2021

Comments:0

10, 11 வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் சனிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட் டுள்ள அறிவிப்பு: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் செப்.16 முதல் செப்.28-ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 தனித்தேர்வர்கள் செப்.15 முதல் செப்.30-ஆம் தேதி வரையிலான நாள்களிலும் நடைபெறவுள்ளது.

பிளஸ் 1, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஆக.7 ஆம் தேதி முதல் ஆக.11-ஆம் தேதி வரையிலான நாள்க ளில் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்ட அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த நாள்களில் விண்ணப்பிக்கத் தவறிய தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் ஆக.12-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை இணையவழியில் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
சிறப்பு அனுமதி கட்டணமாக பத்தாம் வகுப்புக்கு ரூ.500,

பிளஸ் 1 வகுப்புக்கு ரூ.1,000 செலுத்த வேண்டும். பிளஸ் 1, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வர்கள் எழு தவுள்ள தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவு ரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் இந்த விவரங்களை அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலு வலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews