Breaking

Wednesday, July 07, 2021

டெக்ஸ்டைல் கல்லுாரியில் டிப்ளமா படிப்பு அட்மிஷன் அறிவிப்பு.

தரமணியில் உள்ள அரசு டெக்ஸ்டைல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை தரமணியில் உள்ள 'டெக்ஸ்டைல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' என்ற, நெசவு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, முதலாம் ஆண்டு டிப்ளமா படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை www.tngptc.in, www.tngptc.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும், தரமணியில் உள்ள டெக்ஸ்டைல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை அணுகியும், இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

வரும் 12ம் தேதிக்குள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.கல்வி கட்டணம் 2,000 ரூபாய் தான்; 100 சதவீதம் வேலைவாய்ப்பு உள்ளது; மாணவர்களுக்கு அரசு உதவி தொகையும் கிடைக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog