Breaking

Thursday, July 29, 2021

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதனைப் பற்றி தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று தஞ்சாவூர் அருகே கள்ளபெரம்பூர் பகுதியில் உள்ள செங்கழுநீர் ஏரிகள தூர்வாரும் பணியைை பார்வையிட்டார். இந்த பணிகளுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து ஏற்கனவே துறை ரீதியாக ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபடும்போதும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதனைப் பற்றி தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog