Breaking

Monday, June 28, 2021

எட்டயபுரம் மகளிர் பாலிடெக்னிக்கில் - முதலாமாண்டு சேர்க்கை தொடக்கம் - விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 22-ம் தேதி.

எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேபிலதா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கருவியியல் மற்றும் கட்டுப்பாட்டுத்துறை, கணினி பொறியியல் மற்றும் ஆடைத்தொழில் நுட்பவியல் துறை பாடப்பிரிவுகள் உள்ளன.
கல்லூரியில் 2021 - 2022-ம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவிகள் சேர்க்கை இணையதளம் வாயிலாக கடந்த 25-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதற்கான கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாகும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 12-ம் தேதியாகும். இதே போல், நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு ஜூலை 5-ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக மாணவிகள் விண்ணபிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி பிளஸ் 2 அல்லது ஐடிஐ தேர்ச்சியாகும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 22-ம் தேதி.
விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி: https://www.tngptc.in, https://www.tngptc.com.
கல்லூரி கோட் எண்: 178. விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.150. இதை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
எஸ்.சி., எஸ்.டி., மாணவிகளுக்கு விண்ணப்ப பதிவு கட்டணம் கிடையாது. கல்லூரி வளாகத்தில் செயல்படும் சேவை மையம் மூலமாக விண்ணப்பிகலாம். மேலும் விவரங்களுக்கு 04632-271238, 7904662599, 9486195488, 9952125855, 9843699294 ஆகிய செல்போன் எண்களிலும், வாட்ஸ் அப் எண்: 9715526364-லும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு ஜூலை 5-ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக மாணவிகள் விண்ணபிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி பிளஸ் 2 அல்லது ஐடிஐ தேர்ச்சியாகும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 22-ம் தேதி.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog