பொறியியல் மறு தேர்வு: விண்ணப்பிக்காதவர்கள் கவனத்துக்கு... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 23, 2021

Comments:0

பொறியியல் மறு தேர்வு: விண்ணப்பிக்காதவர்கள் கவனத்துக்கு...

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வை எழுத விரும்புவோர் வரும் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அண் ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழக பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் -டிசம்பர் மாத பருவத் தேர்வானது, நிகழாண்டு பிப்ரவரி - மார்ச் மாதங் களில் நடைபெற்றது. இணையவழியில் நடைபெற்ற தேர்வில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதால் மறு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, மறு தேர்வு குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தேர்வு எழுத விண்ணப்பிக்காத மாணவர்கள் மட்டும் மறு தேர்வு எழுத வரும் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்க லைக்கழகம் அறிவித்துள்ளது. அதே வேளையில், ஏற்கெனவே தேர்வுக்கு விண்ணப்பித்தும், கட்டணம் செலுத்தியும் இருந்தவர்கள் மீண்டும் விண் ணப்பிக்க தேவையில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது. மறு தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வரும் 24-இல் தொடங்க உள்ள நிலையில், விரைவில் தேர்வுக்கால அட்டவணையை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews