Breaking

Wednesday, May 12, 2021

தனி தேர்வர்களுக்கு ஆல் பாஸ் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை

கொரோனா தொற்று காரணமாக, தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், ஒன்று முதல், பிளஸ் 1 வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு, ஆல் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 10ம் வகுப்பை பள்ளிகளில் படிக்காத தனி தேர்வர்கள் மற்றும் பிளஸ் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்கள், தங்களுக்கு, ஆல் பாஸ் உண்டா என்ற, குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'தனி தேர்வர்களுக்கு ஆல் பாஸ் வழங்க அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே, அவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும்' என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog