Breaking

Monday, May 03, 2021

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? புதிய அரசு எடுக்கப்போகும் முடிவு!

தமிழகத்தில் அதிகரித்து வரும் நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்படக்கூடிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு தற்போது ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசு அதற்கு வழிவகுக்குமா? என கேள்விகள் எழுந்து வருகிறது.
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.67,000/ முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், கொரோனா வைரஸ் தாக்கம் சற்று கூட தளரவில்லை. கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு தினசரி 7000 என்ற நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கின் போது மக்களும் சரி, அரசாங்கமும் சரி பல பிரச்சனைகளை எதிர் கொண்டது.
SBI SCO வேலைவாய்ப்பு 2021 – Download Notification PDF& Apply Online
பொருளாதார இழப்புகளையும் சந்திக்க நேர்ந்தது. இதனால் நாடு முழுவதும் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்படாது என பிரதமர் மோடி முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு 19 ஆயிரம் வரை பதிவு செய்யப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட பலி எண்ணிக்கையும் ஏற்படுகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த வீதம் குறைவு என்றாலும், அடுத்து வரும் சில நாட்களுக்கு கொரோனா தாக்கம் வீரியமடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற சூழல் மேலும் நீடித்தால் கண்டிப்பாக முழு ஊரடங்கு அவசியம் என மருத்துவ குழுக்கள் எச்சரித்து வருகிறது. தவிர பொது முடக்கம் அறிவிக்கப்பட்டால் மட்டுமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. முந்தைய ஆட்சியில் பொது முடக்கம் குறித்து எந்த வித அறிவிப்புகளும் வெளிவரவில்லை.
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.67,000/
அதற்கான அறிகுறிகளும் தெரியவில்லை. இந்நிலையில் தற்போது நிகழ்ந்துள்ள இந்த ஆட்சி மாற்றத்தினால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா? என்று பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது. ஆட்சிக்கு வரும் முன்னதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவிக்கையில், தமிழகத்தில் இப்போதைக்கு முழு ஊரடங்கு தேவையில்லை என கூறியிருந்தார். தற்போதுள்ள சூழலை கணக்கில் கொள்ளும் போது, புதிய ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog